Skip to main content

Posts

Showing posts from October 11, 2023

ஒரு சீரிய பக்தன் அனுபவிக்கும் துன்பமானது கர்மப் பலன் அன்று

  தத் தே (அ)னுகம்பாம் ஸு-ஸமீக்ஷமாணோ புஞ்ஜான ஏவாத்ம-க்ருதம் விபாகம் ஹிருத்-வாக்-வபுர்பிர் விததன் நமஸ் தே ஜீவேத யோ முக்தி-பதே ஸ தாய பாக் மொழிபெயர்ப்பு போற்றுதற்குரிய பகவானே! உமது அளவற்ற கருணை வேண்டி நம்பிக்கையுடன் காத்திருப்பவன், அக்காலக் கட்டத்தில் தான் செய்த முன்னையப் பாவங்களின் பலன்களைப் பொறுமையுடன் அனுபவித்துக் கொண்டும், தனது மனம், வாக்கு, காயத்தினால் உமக்கு மரியாதையுடன், தனது வணக்கங்களையும் அர்ப்பணித்துக் கொண்டிருந்தானென்றால் அவன் நிச்சயம் விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையனாவான். ஏனெனில் அவ்விடுதலையானது அவனுக்கு மரபு வழியாக வரும் உரிமையாகி விடுகிறது. பொருளுரை ஸ்ரீல ஸ்ரீதர சுவாமிகள் தனது விளக்க உரையில், ஒருவன் தனது தந்தையின் சொத்துக்களை அனுபவிப்பதற்கு மரபு வழியாக எவ்வாறு உரிமையுடையவனாகின்றானோ அது போல பக்தியோக நெறி முறைகளைப் பின்பற்றி கிருஷ்ண உணர்வில் இருப்பவன், முழுமுதற் கடவுளின் கருணையைப் பெறுவதற்குத் தானாகவே தகுதியுடையவனாகிறான். அதாவது அவன் கடவுள் இராஜ்ஜியத்திற்கு உயர்வு பெறுகிறான் என்று குறிப்பிடுகிறார். ஸு-ஸமீக்ஷமான என்னும் சொல் ஒரு பக்தன் தான் செய்த முன்னையப் பாவ...