பகவான் அனைவருடைய இதயத்திலும் சாட்சியாக அமர்ந்திருக்கிறார் என்பதை பகவத்கீதை உறுதி செய்கிறது . இதனால் அவரே உத்தரவிடும் பரம வழிகாட்டியாவார் . செயலின் பலன்களை அனுபவிப்பவர் வழிகாட்டியல்ல . ஏனெனில் பகவானின் உத்தரவு இல்லாமல் ஒருவரும் அனுபவிக்க முடியாது . உதாரணமாக , குடிப் பழக்கத்திற்கு அடிமையானவன் , தடை விதிக்கப்பட்ட ஒரிடத்தில் குடிப்பதற்கு . நிர்வாகியிடம் மனு செய்கிறான் , நிர்வாகியும் அவனுடைய நிலையை கருத்திற்கொண்டு , ஒரு குறிப்பிட்ட அளவு மதுவை மட்டுமே அருந்த வேண்டும் என்ற விதியுடன் அவனை அனுமதிக்கிறார் . அதைப் போலவே , ஜட உலகம் முழுவதும் குடிப்பழக்கமுள்ளவர்களால் நிரப்ப்பட்டுள்ளது . அதாவது ஒவ்வொரு ஜீவராசிக்கும் அவனுடைய மனதில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது . தங்களுடைய ஆசைகள் நிறைவேற வேண்டுமென்று ஒவ்வொருவரும் தீவிர விருப்பம் கொண்டுள்ளனர் . தந்தை மகனிடம் அன்பு கொண்டிருப்பதைப் போல் , சர்வல்லமை பொருந்திய பகவான் , ஜீவராசிகளிடம் உள்ள அன்பினால் அவர்களின் குழந்தைத்தனமான திருப்திக்காக அவர்களுடைய ஆசைகளை கொண்டுள்ள ஜீவரா...