முன்னொரு காலத்தில் உபபர்ஹணா என்றறியப்படும் கந்தர்வன் ஒருவர் இருந்தார். கந்தர்வர்கள் சுவர்க்க லோகத்தில் வாழும் தேவர்களில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் மிகவும் அழகான தோற்றடயவர்களாகவும், நன்றாகப் பாடும் திறனுடையவர்களுமாகவும் இருந்தனர். இவர்கள் வாழும் கிரஹம் கந்தர்வ லோகம் என்றறியப்படுகிறது. உபபர்ஹணா மிகவும் அழகான தோற்றமுடையவராக, அவரது முகம் கவர்ச்சி மிக்கதாகவும், கட்டுமஸ்தான தேக அமைப்பையும் பெற்றிருந்தார். இதனால் பிற கந்தர்வர்களும் கூட இவரை மதித்தனர். இவர் மலர் மாலைகளாலும், சந்தனக் குழம்பினாலும், அழகு சாதனப்பொருட்களினாலும் மற்றும் ஆவரணங்களினாலும் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்வதில் நிபுணராகத் திகழ்ந்தார். அவர் அங்கு வாழ்ந்த பெண்களுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். ஒரு சமயம் சுவர்க்கலோக வாசிகள் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றித் துதிக்கும் பொருட்டு ஆன்மீக விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர். எல்லா விதத்திலுமுள்ள தேவர்களையும் அதாவது கந்தர்வர்கள் மற்றும் அப்ஸரசுக்களும் அவ்விழாவில் பங்கெடுக்க அழைக்கப்பட்டிருந்தனர். உபபர்ஹணாவும் பல அழகிய பெண்கள் புடை சூழ அவ்விழாவிற்...