Skip to main content

Posts

Showing posts from February 9, 2023

பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு நாகரீகமாகிவிட்டது.

  பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் நேரடியாகத் தோன்றி, மனித சமூகத்தின் நன்மைக்காக அவரது உபதேசங்களை விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரை ஒரு சாதாரண மனிதனென்று நினைக்கும் மூடர்களும், அயோக்கியர்களும், தங்களது புலன் திருப்திக்காக பகவத்கீதையின் உபதேசங்களைத் திரித்துக் கூறுகின்றனர். பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு  நாகரீக மாகிவிட்டது இத்தகைய தப்பான கருத்துரைக்களால், தங்களுடைய வாழ்வை மட் டுமல்லாமல், பிறருடைய வாழ்வையும் இவர்கள் நாசமாக்கிவிடுகின்றனர். ஆனால் கிருஷ்ணர் உண்மையானவர் அல்ல, குருட்சேத்திர யுத்தமும் உண்மையல்ல மற்றும் பகவத்கீதையிலுள்ள விஷயங்களும் உண்மையல்ல என்ற இந்த எதிர் வாதத்தை கிருஷ்ணபக்தி இயக்கம் எதிர்த்து வருகிறது. விஷயம என்னவாக இருப்பினும், வாழ்வில் வெற்றிபெற விரும்புபவர், பகவத்கீதை உண்மையுருவில் என்ற நூலைப் படிப்பதால் அதை அடைய முடியும். குறிப்பாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பகவத்கீதையின் உபதேசங்களை வலியுறுத்தியுள்ளார்; யாரே தேக, தாரே கஹ, ‘கிருஷ்ண’ -உபதேச. வாழ்வில் மிகவுயர்ந்த...

அக்ஷௌணி என்றால் என்ன?

  ஓர் அக்ஷௌணி என்பது, 21,870 தேர் மற்றும் யானைகளையும், 109,350 காலாப்படை வீரர்களையும், மற்றும் 65,610 குதிரைகளையும் கொண்டதொரு படையின் அணிவகுப்பைக் குறிக்கிறது. இதைப்பற்றிய சரியான விவரம் மகாபாரதத்தில், ஆதி பர்வத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது: ஏகோ ரதோ கஜஸ் சைக: நரா: பஞ்ச பதாதய: த்ரயஸ் ச துரகாஸ் தஜ்-ஜ்ஞை: பத்திர் இதி அபிதீயதே பத்திம் து த்ரிகுணாம் ஏதாம் விது: ஸேணாமுகம் புதா: த்ரீணி ஸேனாமுகானி ஏகோ குல்ம இதி அதிதீயதே த்ரயோ குல்மா கணோ நாம வாஹினீ து கணாஸ் த்ரய: ஸ்ருதாஸ் திஸ்ரஸ் து வாஹின்ய: பருத்னேதி விசக்ஷணை: சமூஸ் து ப்ருதனாஸ் திஸ்ரஸ் சம்வஸ் திஸ்ரஸ் து அனீகினீ அனீகினீம் தச-குணாம் ஆஹுர் அக்ஷௌஹிணீம் புதா: அக்ஷௌஹிண்யஸ் து ஸங்க்யாதா ரதானாம் த்விஜ-ஸத்தமா: ஸங்க்யா-கணித-தத்வக்ஞை: ஸஹஸ்ராணி ஏக-விம்சதி சதானி உபரி சாஷ்டௌ ச பூயஸ் ததா ச ஸப்ததி: கஜானாம் து பரீமாணம் தாவத் ஏவாத்ர நிர்திசேத் ஞேயம் சத-ஸஹஸ்ரம் து ஸஹஸ்ராணி ததா நவ நராணாம் அதி பஞ்சாசச் சதானி த்ரீணி சானுகா: பஞ்ச-ஷஷ்டி-ஸஹஸ்ராணி ததாஸ்வானாம் ச தானி ச தசோத்தராணி ஷட் சாஹுர் யதாவத் அபிஸங்க்யயா ஏதாம் அக்ஷௌஹிணீம் ப்ராஹ...

கவலை மற்றும் மன அழுத்தம்