அதிகரித்துக் கொண்டே போகும் பகவானின் அழகினை வர்ணிக்கப் போதுமான வார்த்தைகள் கிடையாது. பகவானின் உலக மற்றும் ஆன்மீகப் படைப்புக்களிலேயே எழில் நலம் மிக்கவள் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமியே ஆவாள்; தான் மிக்க அழகுடையவர் என்னும் உணர்வு அவளிடம் இருக்கிறது, இருந்தும் பகவான் முன்னால் அவளது அழகு தோற்கடிக்கப்பட்டது. அதாவது பகவானின் முன்னர் இலட்சுமி தேவியின் அழகு இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது என்று கூறலாம். வைணவக் கவிஞர்களின் வார்த்தைகளின்படி கண்ணைக் கவரும் பகவானின் அழுது ஆயிரம் மன்மதன்களைத் தோற்கடிக்கக் கூடியதாகும். ஆதலினாலேயே அவர் மதன மோஹனன் என்றழைக்கப்படுகிறார். மேலும் பகவான் கூட சில நேரங்களில் ராதா ராணியின் அழகில் மயங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவிஞர்கள், அச்சூழ்நிலைகளின் கீழ் பகவான் மதன மோஹனனாக இருந்த போதிலும் கூட அவர் மதன தாஹன் அல்லது ராதாராணியின் அழகில் மயங்கியவர் என்று விளக்குகின்றனர். உண்மையில் பகவானின் எழிலானது மேன்மை மிக்கதாகும். அது வைகுண்ட லோகத்திலுள்ள இலட்சுமி தேவியின் எழிலையும் வெல்லக் கூடியதாகும். வைகுண்ட லோகத்திலுள்ள பகவானின் பக்தர்கள் பகவானை அழகில் சிறந்தவராகக் காண ...