Skip to main content

Posts

Showing posts from November 19, 2021

கார்த்தியாயினி விரதம்

மார்கஸீர்ஷ மாதத்தில் ஆயர்குல இளமங்கையர் அதிகாலையில் எழுந்து ஒருத்தி மற்றொருத்தியின் கைகளைப் பற்றிக் கொண்டு கிருஷ்ணரின் கல்யாணகுணங்களைச் சிறப்பித்துக் பாடிக்கொண்டே யமுனை நதிக்கு நீராடச் செல்வர். நீராடி முடித்த கோபியர்கள் கிருஷ்ணரே தமது கணவராக வர வேண்டும் என்று விரும்பி கார்த்தியாயினி தேவியை தூய தீபங்கள் மற்றும் மலர்களைக் கொண்டு வழிபடுவர். ஒரு நாள் காலையில் கோபியர் தமது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்துவிட்டு, யமுனை நதியில் இறங்கி கிருஷ்ணரின் லீலைகளைப் போற்றியபடியே நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு தோன்றிய கிருஷ்ணர் கோபியர்களின் ஆடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அருகில் நின்ற ‘கதம்ப’ மரத்தில் ஏறிக் கொண்டார். கோபியர்களைக் கேலி செய்ய விரும்பிய கிருஷ்ணர் அவர்களிடம் “நீங்கள் மேற்கொண்ட விரதங்களினால் எவ்வாறு களைப்புற்றிருக்கின்றீர்கள் என்பதை நான் நன்கறிவேன். ஆகையினால் கரைக்கு வந்து உங்களது ஆடைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனைக் கேட்டுச் சினமுற்றவர்களைப் போல் நடித்த கோபியர்கள், அதிக நேரம் யமுனையின் குளிர்ந்த நீரில் தாங்கள் துன்புறுவதா...

கிருஷ்ண அவதாரம் மற்றும் நோக்கம்

ஸத்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் குணாஸ் தைர் யுக்த:பர:புருஷ ஏக இஹாஸ்ய தத்தே ஸ்திதி-ஆதயே ஹரி-விரின்சி-ஹரேதி ஸம்ஞா: ஸ்ரேயாம்ஸி தத்ர கலு சத்வ-தனோர் நிர்ணாம் ஸ்யு: மொழிபெயர்ப்பு தெய்வீக புருஷராகிய பகவான், ரஜோ குணம், சத்வ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய ஜட இயற்கையின் முக்குணங்களுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டிருக்கிறார். மேலும் ஜடவுலகின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் முத்தொழில்களுக்காக அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று குண அவதாரங்களை ஏற்றுக்கொள்கிறார். இம்மூவருள், நற்குண (சத்வ) ரூபமான விஷ்ணுவிடமிருந்தே மக்களனைவரும் முடிவான நன்மைகளைப் பெற முடியும் பொருளுரை மேலே குறிப்பிட்டதுபோல், விரிவங்கங்களாகத் தோன்றியுள்ள அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்ற வேண்டும் என்பது இப்பதத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அவரது எல்லா விரிவங்கங்களும் ‘விஷ்ணு-தத்வங்கள்’ அல்லது பரம புருஷர்களேயாவர். ஸ்ரீ கிருஷ்ணரிலிருந்து வரும் அடுத்தத் தோற்றம் பலதேவராவார். பலதேவரிலிருந்து சங்கர்ஷணரும், சங்கர்ஷணரிலிருந்து நாராயணரும், நாராயணரிலிருந்து இரண்டாவது சங்கர்ஷணரும், இந்த சங்கர்...