Skip to main content

Posts

Showing posts from August 7, 2021

ஊஞ்சல் உற்சவம்

 

ஊஞ்சல் உற்சவம்

 

பகவானின் பெருமைகளை எப்பொழுதும் பாடிக் கொண்டிருந்தால் மனதிருப்தி நிச்சயம்.

  பகவானின் பெருமைகளை எப்பொழுதும் பாடிக் கொண்டிருந்தால் மனதிருப்தி நிச்சயம். ஜீவராசியால் சிறிது நேரம்கூட அமைதியாக இருக்க முடியாது. அவன் எதையாவது செய்து கொண்டோ, நினைத்துக் கொண்டோ அல்லது எதைப் பற்றியாவது பேசிக்கொண்டோதான் இருப்பான். பௌதிகவாதிகள் பொதுவாக தங்களது புலன்களை திருப்திப்படுத்தும் விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால் இவ்விஷயங்கள் மாயா சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இவை எவ்வித திருப்தியையும் அளிப்பதில்லை. எனவே அவர்கள் கவலைகளும், ஆவல்களும் நிறைந்தவர்களாக மாறிவிடுகின்றனர். இது மாயா அல்லது பொய்த் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. திருப்தி அளிக்காத பொருளை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இது மாயா அல்லது பொய்த் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே பகவானின் பெருமைகளை எப்பொழுதும் பாடிக் கொண்டிருப்பதுதான், புலன் நுகர்வில் ஈடுபட்டுள்ள இத்தகைய அதிருப்தியடைந்த ஜீவன்களுக்கு திருப்தியை அளிக்கும் என்று நாரத முனிவர் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாகக் கூறுகிறார். ஒரு ஜீவராசியின் சிந்தனை, உயர்வு, விருப்பம் அல்லது செயல் ஆகியவற்றை ஒருவராலும் தடுக்க முடியாது. ஆ...

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரே எல்லா அவதாரங்களின் மூல புருஷராவார்

  கிருஷ்ணதாஸ கவிராஜரின் சைதன்ய சரிதாம்ருதத்திலுள்ள (மத்திய லீலை 20.263-264) பின்வரும் பதங்கள் அவதாரத் தத்துவங்களைச் சுருக்கமாகக் கூறுகின்றன   ஸ்ருஷ்டி-ஹேது யேய் மூர்தி ப்ரபஞ்சே அவதரே ஸேய் ஈஷ்வர-மூர்த்தி 'அவதார ' நாம தரே மாயாதீத பரவ்யோமே ஸபார அவஸ்தான விஷ்வே அவதாரி ' தரே 'அவதார ' நாம "ஜடவுலகில் தோன்றுவதற்காக, முழுமுதற் கடவுள் தனது திருநாட்டிலிருந்து கீழிறங்கி வருகிறார். அவ்வாறு அவர் தோன்றும்போது, 'அவதாரம் ' என்று அழைக்கப்படுகிறார். ஆன்மீக உலகில் நிரந்தரமாக உள்ள இந்த ரூபங்கள், பௌதிக்க படைப்பிற்குள் தோன்றும் போது 'அவதாரம் ' என்ற பெயரைப் பெறுகின்றனர்." புருஷ அவதாரங்கள், குண அவதாரங்கள், லீலா அவதாரங்கள், சக்தியாவேஷ அவதாரங்கள், மன்வந்தர அவதாரங்கள், யுக அவதாரங்கள் என்று பல்வேறு அவதாரங்கள் உள்ளன—அகிலமெங்கும் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் தோன்றுகின்றனர். ஆயினும், பகவான் கிருஷ்ணரே எல்லா அவதாரங்களின் மூல புருஷராவார். தனது விருந்தாவன லீலைகளைக் காண்பதற்குப் பேராவல் கொண்டிருந்த தூய பக்தர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பது என்னும் முக்கிய நோக்கத்திற்காக பகவான் ஸ்ர...

பக்தர்களை நிராகரிப்பதை விட அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது

  பக்தர்களை நிராகரிப்பதை விட அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது ஸ்ரீல பிரபுபாதர்: இப்போது அவர்கள் சந்நியாசி பக்தரின் கட்டளைகளைக் கேட்டு நடக்க வில்லை என்றால் பொதுவாக...ஆனால் இந்த விசயம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். பின் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதாவது."உங்களால் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியவில்லையென்றால் கண்டிப்பாக நீங்கள் வெளியேறிவிட வேண்டும். இது மிகத் தெளிவான விசயம். இதில் சண்டை என்ற கேள்விக்கே இடமில்லை. முக்கியமான விசயம் என்னவென்றால் சந்நியாசி பக்தர்கள் அல்லது தலைமைப் பொறுப்பில் இருக்கும் பக்தர்கள் தாங்கள்  முதலில் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பிறகு மற்றவர்களையும் பின்பற்றும்படி கேட்க வேண்டும். யார் இதைப் பின்பற்றவில்லையோ முதல் முறை இரண்டாவது முறை என விட்டுப்பார்க்கலாம். அதன்பிறகு மூன்றாவது முறையும் பின்பற்றி நடக்கவில்லையெனில், "தயவு செய்து வெளியேறி விடுங்கள் என்று சொல்லிவிட வேண்டியது தான். ஷியாமசுந்தர்: கொள்கைகளைப் பின்பற்றி நடந்தால் அவர் தானாகவே மதிக்கப்படுவார். அச்யுதானந்தர்...