நாரதரின் கருணையும் கைலாஷின் விருப்பமும். ஒரு உயிர்வாழி எவ்வாறு தன்னுடைய விருப்பத்திற்கேற்ப, இறந்தபிறகு ஒரு உடலிலிருந்து மற்றோரு உடலிற்கு செல்கிறது என்பதை பின்வரும் கதையிலிருந்து அறியலாம். கைலாஷ் என்ற ஒருவன் தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தான். ஒரு நாள் மாமுனிவரான நாரதர், அவனிடம் வந்து, "கைலாஷ்! என்னோடு வா. நான் வைகுந்தத்திற்கு செல்கிறேன். என்னுடன் உன்னையும் அழைத்து செல்கிறேன்", என்று கூறினார். அதற்கு கைலாஷ், "என்னை மன்னியுங்கள் ஐயா. என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். நான் அவர்களை பராமரிக்க வேண்டும். என்னால் இப்போது வர இயலாது. சிறிது காலம் கழித்து பார்க்கலாம்", என்று பதிலளித்தான். பல வருடங்கள் கழித்து நாரத முனிவர் மீண்டும் கைலாஷிடம் வந்து, "கைலாஷ்! இப்போது வைகுந்தம் வர தயாரா?" என்று கேட்டார். கைலாஷ், "அய்யா, என்னுடைய பேரப்பிள்ளைகளை நான் கவனிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உதவி என் குடும்பத்தினருக்கு மிகவும் அவசியம். என்னால் வர இயலாது", என்று கூறினான். மீண்டும் சில வருடங்கள் கழித்து அங்கு வந்த நாரத முனிவர் கைலாஷ் இற...