Skip to main content

Posts

Showing posts from April 6, 2022

ஶ்ரீபாத ராமனுஜ ஆச்சாரியார்

வைணவ தர்மத்தைப் பரப்பிய ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவராக விளங்கியவர் ஶ்ரீபாத இராமானுஜர். ஆதிசேஷனின் அவதாரமான இவர் கலி யுகத்தில் 1017ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இராமானுஜரின் தோற்றம், செயல்கள், உபதேசம், மறைவு என அனைத்துமே திவ்யமான லீலைகளாகும். 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼  ஸ்ரீ ஸம்பிரதாயம் எனப்படும் இராமானுஜ பரம்பரையில் பகவத் கைங்கரியத்தோடு இணைந்து வைஷ்ணவ கைங்கரியத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பக்தன் தனது ஆச்சாரியருக்கும் சக வைஷ்ணவர்களுக்கும் சேவை செய்வதில் மிகுந்த முனைப்புடன் இருக்க வேண்டும். அத்தகு மனப்பான்மையினை இராமானுஜரின் வாழ்விலும் அவரைச் சார்ந்த இதர பக்தர்களின் வாழ்விலிருந்தும் சில உதாரணங்களை வைத்து அறிவோமாக. திருக்கச்சி நம்பிகள் புரிந்த வைஷ்ணவ சேவை 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 காஞ்சிபுரத்தில் இராமானுஜர் வாழ்ந்த சமயத்தில் வரதராஜ பெருமாளுக்கு திருக்கச்சி நம்பிகள் (காஞ்சிபூர்ணர்) என்ற மாபெரும் பக்தர் தினந்தோறும் சாமரம் வீசும் சேவையை ஏற்றிருந்தார். வரதராஜ பெருமாளுடன் அவர் சகஜமாக பேசக்கூடியவர், அதனால...