Skip to main content

Posts

Showing posts from September 11, 2024

ஜய ராதா -மாதவ

 (ஜய) ராதா -மாதவ  (ஜய) குஞ்ஜ-பிஹாரீ (ஜய) கோபீ-ஜன-வல்லப  (ஜய) கி.பூரி-வர-தா ரீ  (ஜய) ஜஷோதா -நந்தன,  (ஜய) வ்ரஜ-ஜன-ரஞ்ஜன (ஜய) ஜா,முன-தீர-வன-சாரீ  கிருஷ்ணர் ராதையின் காதலர். அவர் விருந்தாவனப் புதர்களில் பல்வேறு சிருங்கார லீலைகளை வெளிப்படுத்துகிறார். அவர் விருந்தாவனத்தின் ஆயர்குல கன்னிப் பெண்களின் காதலராவார், கோவர்தனம் எனப்படும் மாபெரும் மலையை உயர்த்திப் பிடித்தவர்,அன்னை யசோதையின் அன்பிற்குரிய மகன், விரஜவாசிகளுக்கு மகிழ்ச்சியளிப்பவர், யமுனை நதிக்கரையின் காடுகளில் உலா வருபவர். (இந்தப் பாடல் ஸ்ரீல பிரபுபாதருக்கு மிகவும் பிடித்தமானதாகும், அவர் இதனை தம்முடைய சொற்பொழிவுகளுக்கு முன்பாகப் பாடுவது வழக்கம். அலகாபாத்திலும் கோரக்புரிலும் இப்பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பாடிய பின்னர், ஸ்ரீல பிரபுபாதர் ஸ்தம்பித்த நிலைக்குச் சென்றார். சிறிதுநேரம் கழித்து வெளிப்புற உணர்விற்குத் திரும்பியபோது, அவர் பக்தர்களை ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடுமாறு கூறினார். "இந்தப் பாடல் விருந்தாவனத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது . ஸ்ரீமதி ராதாராணி, விருந்தாவனம், கோவர்தனம், யசோதை, ஆயர்குலச் சிற...

கோபியர்களின் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 31 / பதம் 1-19 ************************************************************************* பதம் 1 கோப்ய ஊசு : ஜயதி தே ( அ ) திகம் ஜன்மா வ்ரஜ ஸ்ரயத இந்திரா ஸஸ்வத் அத்ர ஹி கயித் த்ருஸ்யதாம் திக்ஷு தவாகாஸ் த்வயி த்ருதாஸவஸ் த்வாம் விசின்வதே மொழிபெயர்ப்பு கோபியர்கள் கூறினர் : ஒ , அன்பிற்குரியவரே , விரஜத்தில் பிறந்ததினால் , உமது பிறப்பு அதன் புகழை அதிகரித்திருக்கின்றது . அதனால் அதிர்ஷ்ட தேவதையான இந்திரா எப்போதும் இங்கே வசிக்கின்றாள் . உமக்காகவே உமது பக்தியுள்ள பணிப்பெண்களாகிய நாங்கள் எங்கள் எல்லாவிடங்களிலும் தேடிக் கொண்டிருக்கின்றோம் , அருள் கூர்ந்து உம்மைக் காணும் மகிழ்வை எங்களுக்குத் தந்தருள்வீராக .   பதம் 2 ஸரத் - உதாஸயே ஸாது - ஜாத - ஸத் - ஸரஸிஜோதர - ஸ்ரீ - முஷா த்ருஸா ஸுரத - நாத தே ( அ ) ஸுல்க - தாஸிகா வர - த நிக்னதோ நேஹ வத : மொழிபெயர்ப்பு ஓ , காதல் தேவனே , அழகில் , உமது பார்வை சரத் காலத் தாமரைத் தடாகங்களில் மலர்ந்திருக்கும் எழில் மிகு தாமரை மலர்களின...