இந்த உலகில் , எல்லாரும் உலகியல் இன்பம் பெற முயற்சி செய்கின்றனர் , ஆனால் நமக்குச் சிறிதளவு ஜடவுலக இன்பம் கிடைத்தவுடன் , அதனோடு துன்பமும் உள்ளது . இந்த ஜடவுலகில் ஒருவர் கலப்படமில்லாத இன்பம் பெற முடியாது . ஒருவரிடம் இருக்கும் எந்த வித இன்பமும் , துன்பத்தாலும் மாசுபடுத்தப்பட்டது . சான்றாக , நாம் பாலைக் குடிக்க விரும்பினால் பின்னர் ஒரு பசுவைப் பாதுகாத்து , அது பால் தரத் தகுதி வாய்ந்ததாக இருக்க வேண்டும் . பால் குடித்தல் மிகவும் நல்லது ; அது இன்பம் ஆனதும் ஆகும் . ஆனால் பால் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் பல தொல்லைகளை ஏற்க வேண்டும் . பகவானால் இங்கு குறிப்பிடப்பட்டதுபோல , யோக முறை இவ்வுலக இன்பத்தையும் , இவ்வுலகின் துன்பத்தையும் போக்கவே உள்ளது . கிருஷ்ணரால் பகவத் கீதையில் கற்பிக்கப்பட்டதுபோல , சிறந்த யோகம் பக்தி யோகம் ஆகும் . ஒருவர் சகிப்புத் தன்மையுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும் , ஜடவுலக இன்பம் அல்லது துன்பத்தால் தொல்லை அடைதல் கூடாது என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது . ஜடவுலக இன்பத்தால் ...