Skip to main content

Posts

Showing posts from June 5, 2023

புத்தி என்பது என்ன?

புத்தி என்பது, விஷயங்களை அதன் முறையான கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அறியும் சக்தியைக் குறிக்கும். ஞானம் (அறிவு) என்பது, ஜடம் என்றால் என்ன, ஆன்மா என்றால் என்ன, என்பதைப் புரிந்துகொள்வதைக் குறிக்கும். பல்கலைக்கழகத்தில் பெறப்படும் சாதாரண அறிவு, ஜடத்துடன் மட்டுமே தொடர்புடையதாக உள்ளது. அதனால் அஃது இங்கே ஞானமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஞானம் என்றால் ஜடத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாட்டை அறிவதாகும். நவீனக் கல்வி முறையில் ஆத்மாவைப் பற்றிய அறிவுஇல்லை, ஜடப் பொருள்களிலும் உடல் தேவைகளிலும் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். எனவே பல்கலைக்கழகத்தின் அறிவு முழுமையானது அல்ல. அஸம்மோஹ, ஐயம் மற்றும் மயக்கத்திலிருந்து விடுதலை, ஒருவன் சந்தேகங்களைத் தாண்டி திவ்யமான தத்துவத்தைப் புரிந்துகொள்ளும் போது இந்நிலை அடையப்படுகின்றது. மெதுவாக, ஆனால் நிச்சயமாக அவன் மயக்கத்திலிருந்து விடுபடுகிறான். எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அனைத்தையும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். பகவத் கீதை உண்மையுருவில்10.4-5 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிரு...

பக்தர்களைக் காக்கும் பகவான்

பாண்டவர்கள் தங்களது மனைவியான திரெளபதியுடன் வனவாசத்தில் இருந்தபோது, துர்வாசரும் அவரது சீடர்களும் வனத்திற்குச் சென்று பாண்டவர்களை சந்தித்தனர். சத்திரியர்கள் என்ற முறையில் பாண்டவர்கள் பிராமணர்களை வரவேற்று உபசரிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் துர்வாசரின் வருகைக்கு முன்னரே உணவருந்தி முடித்திருந்தனர் என்பதால், விருந்தினர்களுக்கு வழங்க அவர்களிடம் உணவு ஏதுமில்லை. குழப்பமடைந்த பாண்டவர்கள் உணவளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குள் ஸ்நானம் செய்து விட்டு வருமாறு அவர்களை கேட்டுக் கொண்டனர். பகவான் கிருஷ்ணர் தமது பக்தர்களை எப்போதும் காக்க வேண்டும் என சபதம் கொண்டுள்ளார். எனவே, பாண்டவர்கள் குழப்பத்திலிருந்தபோது கிருஷ்ணர் அங்கே சென்று, “என்ன பிரச்சனை?” என்று வினவினார். அவர்கள் நடந்ததை விளக்கினர். கிருஷ்ணர் திரௌபதி உணவருந்தி விட்டாளா என்பதை விசாரித்தார். அவளும் தான் உண்டு முடித்து விட்டதாகக் கூறினாள். [திரெளபதியிடம் ஒரு அட்சய பாத்திரம் இருந்தது: அவள் உணவருந்தாத வரை அந்த பாத்திரத்திலிருந்து எத்தனை விருந்தினர்கள் வந்தாலும், அவளால் உணவளிக்க முடியும்.] சமையலறையில் சிறிதளவேனும் உணவு உள்ளதா என கிருஷ்ண...