Skip to main content

Posts

Showing posts from March 26, 2021

சாந்திபுரம் பண்டிகை

  சாந்திபுரம் பண்டிகை  வழங்கியவர் - திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁 சாந்திபுரம், அத்வைத ஆச்சாரியரின் விசேஷ வசிப்பிடம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 இன்றைய இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள மாயாபுரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதே சாந்திபுரம் என்னும் திருத்தலம். சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் தோன்றுவதற்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்த அத்வைத ஆச்சாரியர் இவ்விடத்தில் வசித்ததால், இத்திருத்தலம் கௌடீய வைஷ்ணவர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்ததாகும். அத்வைத ஆச்சாரியர் மஹாவிஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால், இத்திருத்தலம் வைகுண்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. அத்வைதரின் தோற்றம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 அத்வைத ஆச்சாரியர் 1434ஆம் ஆண்டில், தற்போதைய வங்கதேசத்தின் சில்லட் நகரத்திற்கு அருகிலுள்ள நவகிராமத்தில், ஸ்ரீ குபேர பண்டிதருக்கும் ஸ்ரீமதி நாபதேவிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இந்திய எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள அத்வைத ஆச்சாரியரின் பிறப்பிடத்தில் சிறு கோயில் எழுப்பப்பட்டுள்ளது, அது தற்போது இஸ்கான் இயக்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது, குறுகிய காலத்தில் அத்வைத ஆச்சாரியர் கங்கைக் கர...