சைதன்ய ஸம்ப்ரதாயத்தின் ப்ரதான ஸ்தம்பம் போன்றவரும், கௌர லீலைகளின் முதல் ப்ரவர்த்தகரும் ஆகிய அத்வைத ஆசார்யரியர் வயதினாலும், கல்வியினாலும், அறிவினாலும் முதியவராக இருந்த போதிலும், பாலகனான ஸ்ரீ மஹாப்ரபுவின் பாததூளியை சிரோபூஷணமாகக் கொண்டவர்.பகவான் ஶ்ரீ சைதன்ய மாஹாபிரபுவின் அவதாரத்துக்கு முன்னரே தோன்றி , கௌர லீலைகளுக்கு வழி வகுத்துத்தானும் பல லீலைகள் செய்து மகிழ்ந்தவர். இவரும் ஷில்ஹட் ஜில்லாவில் இருக்கும் நவக்ராமம் என்னும் நகரின் ஒரு சிறு கிராமவாசியே! அந்நாட்களில் பல சிற்றரசுகள் இருந்தன. அதில் லாவுட் என்னும் சிற்றரசை பரம தார்மீகமான ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனது ராஜ சபையில் அத்வைத ஆசார்யரின் தந்தை 'பண்டித குபேர தர்க்க பஞ்சானன்', ராஜ பண்டிதராக இருந்து வந்தார். தர்க்கபஞ்சானன் சிறந்த நியாயாதிபதி. அவர் புகழ் வாய்ந்த வித்வான். அத்துடன் நல்ல செல்வந்தர். குழந்தை இல்லாத குறையினால், அவரும் அவரது மனைவி லாபாதேவியும் மிகுந்த வருத்தமுற்று இருந்தனர் அவரகளுக்குப் பல குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. இதனால் அவர்கள் மிகவும் வருத்தமும் வேதனையடைந்தனர், நித்தமும் பாகவானிடம் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க பக...