Skip to main content

Posts

Showing posts from July 16, 2021

ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம் - உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகா மருந்து

  உணவினால் வரும் பாதிப்புகள் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஆஹார ஷுத்தௌ ஸத்வ ஷுத்தி  ஒருவனது ஆகாரம் சுத்தமானதாக இருந்தால் அவனது உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, உண்ணும் உணவு குறித்து நாம் எப்போதுமே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருத்தல் வேண்டும். உணவை சமைப்பவரின் அல்லது பரிமாறுபவரின், மனநிலையும் உணர்வு களும் உணவைப் பாதிக்கும். தீய உணர்வுடையோரால் வழங்கப்படும் உணவை உண்பதால், உண்பவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, உணவு வழங்குபவரின் பாவகர மான கர்மாக்களிலும் (தீவினைகளிலும்) உண்பவர் பங்கெடுத்துக்கொள்ள நேரிடும். மஹாபாரதத்தில் இது குறித்த ஒரு சம்பவம் உள்ளது. மகாஜனங்களில் ஒருவரான பீஷ்மரிடம் திரௌபதி, துரியோதனனால் தான் அரசவையில் அவமானப்படுத்தப்பட்டபோது தன்னைக் காப்பாற்றத் தவறியது குறித்து வருத்தம் தெரிவித்தாள். அப்போது பீஷ்மர், துரியோதனன் இட்ட உணவை உண்டதால்தான் தனது மனநிலை பாதிக்கப்பட்டு அவனது பாவகரமான கர்மாக்களில் பங்கெடுத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். பீஷ்மருக்கே அந்த நிலை என்றால், நமது நிலை என்ன? பகவான் ஸ்ரீ சைதன்யர் கூறுகிறார், “ஜட விஷய...

புனித யாத்திரை ஸ்தலமான ஶ்ரீதாம் மாயாபூரில் பகவான் ந்ரிஸிம்ஹ தேவரின் நித்திய லீலைகளில் சில . . .

  புனித யாத்திரை ஸ்தலமான ஶ்ரீதாம் மாயாபூரில்  பகவான் ந்ரிஸிம்ஹ தேவரின் நித்திய லீலைகளில் சில . . . . 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 லீலை :1  பகவான் ந்ரிஸிம்ஹ தேவரின் பூஜாரி மிகவும் திடுக்கிடச்செய்யும் ஒரு கனவு கண்டார். அதில் கோவிலின் இயக்குநர் அந்த பூஜாரியைக் கூப்பிட்டு சிறிது டீசல் எண்ணெய் கொண்டு வரும்படி கூறினாராம்; “நாம் பகவான் ந்ரிஸிம்ஹ தேவரை பலியிடப்போகிறோம்.” என்று கூறினார்.  “நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று பூஜாரி கத்தினார்.  “ஆமாம் நாம் பகவான் ந்ரிஸிம்ஹ தேவரை பலியிடப்போகிறோம்”. “நீங்கள் அதைச் செய்ய முடியாது. அது பைத்தியக்காரத்தனம்!” - பூஜாரி. “நீங்கள் டீசலை மட்டும் கொண்டுவாருங்கள். உங்களால் முடியுமா?” “சரி நான் எண்ணெயைக் கொண்டு வருகிறேன். அதை வைத்து எதையும் செய்யக்கூடாது. அது அர்த்தமற்றது”  சிறிது நேரத்திற்குப்பிறகு பூஜாரி கோயிலுக்குத் திரும்பிவந்தார். ஒரு பெரிய நெருப்பினால் அனைத்தும் எரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து முழு அதிர்ச்சி அடைந்தார்; அங்கு ந்ரிஸிம்ஹ தேவரின் பாதங்களும் கணுக்கால்களும் மட்டுமே மிஞ்சியிருந்தன.  மறுநாள் ...