Skip to main content

Posts

Showing posts from September 16, 2021

பார்ஸ்வ ஏகாதசி

பார்ஸ்வ ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏகாதசியை பரிவர்த்தினி (அல்லது) வாமன ஏகாதசி என்றும் கூறுவர். மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். புரட்டாசி மாத வளர்பிறையில் (ஆகஸ்ட்/செப்டம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும். இதனால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? என்பனவற்றை தயவு செய்து எனக்கு விளக்கமாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ மன்னா, புரட்டாசி, மாத வளர்பிறையில் (ஆகஸ்ட்செப்டம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் பார்ஸ்வ ஏகாதசி, இந்த ஏகாதசி மிகவும் மங்களகரமானது. இது ஒருவரின் எல்லா பாவங்களையும் அழித்து முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பதாலேயே ஒருவரின் பாவ விளைவுகள் அனைத்தும் அழிக்கப்படும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் அடையும் பலனை ஒருவர் வாஜ்பேய யாகத்தை மேற்கொண்டாலும் அடைய முடியாது. இந்த ஏகாதசியை ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறுவர் இந்த ஏகாதசியன்று பக்தியுடன் பகவான் வாமன தேவரை வழிபடு...