Skip to main content

Posts

Showing posts from November 22, 2021

பிரம்மாவின் பிறப்பு மற்றும் ஶ்ரீமன் நாராயணனின் வல்லமை

  பிரம்மாவின் பிறப்பு மற்றும் ஶ்ரீமன் நாராயணனின் வல்லமை படைப்பிற்குப் பிறகு பிறந்த முதல் ஜீவராசியான பிரம்மா, நாராயணரின் நேரிடையான மகனாவார். நாராயணர், கர்போதகசாயி விஷ்ணுவாக ஜடப் பிரபஞ்சத்தினுள் முதன்முதலாகப் பிரவேசித்தார். ஆன்மீக தொடர்பின்றி ஜடத்தினால் படைக்க முடியாது. படைப்பின் முதல் துவக்கத்திலிருந்தே இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பரமாத்மா பிரபஞ்சத்திற்குள் புகுந்தார். விஷ்ணுவின் நாபியிலிருந்து உதயமாகி மலர்ந்த தாமரைப் பூவின் மீது முதல் ஜீவராசியான பிரம்மா பிறந்தார். இதனால் விஷ்ணு பத்மனாபன் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மா, தாய் லக்ஷ்மி தேவியின் தொடர்பில்லாமல், தந்யைிடமிருந்து நேரடியாகப் பிறந்தவராவார். இதனால் அவர் “ஆத்ம பூ” எனப்படுகிறார். லக்ஷ்மிதேவி நாராயணருக்குப் பணிவிடை செய்துகொண்டு அவரருகிலேயே இருந்தாள். இருப்பினும் லக்ஷ்மி தேவியின் தொடர்பு இல்லாமலேயே நாராயணர் பிரம்மாவைப் பெற்றார். அது பகவானின் சர்வசக்தியாகும். நாராயணர் மற்ற ஜீவராசிகளைப் போன்றவர் என்று முட்டாள்தனமாகக் கருதுபவன் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாராயணர் சாதாரண ஒரு ஜீவராசியல்ல. அவர் சாக்ஷாத் பரம புருஷ பகவானா...