Skip to main content

Posts

Showing posts from January 17, 2021

துளசி தீர்த்தம் மற்றும் கார்த்திகை மாத விரதத்தின் மகிமை

  துளசி தீர்த்தம் மற்றும் கார்த்திகை மாத விரதத்தின் மகிமை ஆதாரம் - பத்ம புராணம் ஆதாரம் - பத்ம புராணம் / உத்தர காண்டம் / அத்தியாயம் 6 வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁      முன்னொரு காலத்தில் "கர்மவீரபும்" என்ற ஊரில் தர்மதத்தன் என்ற பெயருடைய ஒரு பிராமணன் வசித்தான். அவன் சதா காலமும் பகவான் விஷ்ணுவை ஆராதித்து வந்ததோடு பகவானுக்குப் பிரியமான விரதங்களையும் நியமம் தவறாமல் அனுசரித்து வந்தான், துவதாச அட்சர மந்திரத்தையும் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தையும் இடையறாமல் ஜெபித்துவந்தான். அதிதிகளை உபகரிப்பதிலும் சிறந்து விளங்கினான்.      கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் இரவு பகவான் ஹரியை தியானித்தபடி விழித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் பயங்கரமாக அலறிக்கொண்டு வந்த ராட்சசியைக் கண்டான். ரத்தத்தைப் போல் சிவந்த கண்களும் அகன்ற தாடையில் வெளிப்பட்டுக் காணப்பட்ட கோரப் பற்களுமாக அவள் மிகவும் பயங்கரமாகக் காட்சியளித்தாள் உடம்பில் ஆடையில்லாமலும், பிணவாடைவீசக்கூடிய நீண்ட கரங்களை அசைத்தபடியாகவும், பயங்கரமான அலறலோடு ...

எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை

 

மூவகை துன்பங்கள்

 

கிருஷ்ண உணர்வில் ஒருவருக்கு பொறுமை மற்றும் தன்னம்பிக்கை வேண்டும்

கிருஷ்ண உணர்வில் ஒருவர் பொறுமையற்றவராக இருக்கக் கூடாது. உண்மையில், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் பிறருதவி இல்லாமல் தனியே ஆரம்பிக்கப்பட்டதாகும். மேலும் துவக்கத்தில் இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் நமது பக்தித் தொண்டை நாம் பொறுமையுடன் தொடர்ந்து செய்தால், இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் படிப்படியாக அறியத் துவங்கினர். மேலும் இப்போது அவர்கள் விருப்பத்துடன் பங்கு பெறுகின்றனர். பக்தித் தொண்டை நிறைவேற்றுவதில் பொறுமையை இழந்து விடக் கூடாது. ஆனால் ஆன்மீக குருவிடமிருந்து உபதேசங்களை ஏற்று, அவற்றை குரு, கிருஷ்ணரின் கருணையை நம்பி, பொறுமையுடன் நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ண உணர்வுச் செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பொறுமை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன. புதிதாக திருமணமணான பெண் ஒருத்தி இயல்பாகவே தனது கணவனிடம் இருந்து குழந்தையை எதிர்பார்க்கிறாள். ஆனால் திருமணமான உடனேயே அதை அவள் எதிர்பாபர்க்க முடியாது. திருமணமான உடனேயே குழந்தை பெறும் முயற்சியில் அவள் ஈடுபடலாம் என்பது சரிதான். ஆனால் அவள் தனது கணவனிடம் சரணடைந்து, குழந்தை விருத்தியடைந்து, உரிய காலத்தில் பிறக்கும் என்பதில் அவள் ...