Skip to main content

Posts

Showing posts from February 7, 2021

நான்கு குமாரர்கள்

  நான்கு குமாரர்கள் ( சனகர், சனாதனர், சனந்தனர், மற்றும் சனத்குமாரர் ) வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுளின் ஒரு குறிப்பிட்ட சக்தி ஒரு குறிப்பிட்ட உயிர்வாழிகட்கு அளிக்கப்படும் பொழுது அவர்கள் "ஆவேச அவதாரங்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்.  நான்கு குமாரர்களும் குறிப்பாக முழுமுதற் கடவுளின் ஞான சக்தியின் பிரதிநிதிகளாவர்.  இவர்கள் பகவானைப் பற்றிய உன்னத அறிவை மிகத் தெளிவாக விளக்கியதால் அனைத்து சாதுக்களும் ஒரே நேரத்தில் இந்த அறிவை எவ்வித சிரமமும் இல்லாமல் கிரகித்துக் கொள்ள முடிந்தது.  நான்கு குமாரர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனக்குள்ளேயே முழுமுதற் கடவுளை காண முடியும். படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மதேவர் அவரது மனதின் சக்தியில் இருந்து நான்கு புதல்வர்களை படைத்தார்.  அவர்கள் நான்கு குமாரர்கள் எனப்பட்டனர்.  பிரபஞ்சத்தில்  பிரஜைகளை பெருக்குவதன் பொருட்டு  பிரம்மதேவர் பிறப்பித்த கட்டளையைக் கேட்டதும் குமாரர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் வாழ்நாள் முழுவதும் இல்லறத்தில் ஈடுபடாமல் பிரம்மச்சாரிகளாகவே  இருக்க...

சட்- திலா ஏகாதசி

  சட்- திலா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁 தை-மாசி கிருஷ்ண பட்சத்தில்வரும் ஏகாதசி திதியை சட்-திலா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். சட்-திலா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம். மனதிற்கு மிகவும் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் ஏகாதசி விரத மஹாத்மியத்தின் உன்னதக் கதைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்டு மகிழ்ந்த அர்ஜூனன், பக்தியுடனும், சிரத்தையுடனும் வணங்கி "மதுசூதனா" தாங்கள் கூறிய ஏகாதசி விரத மஹாத்மியம் என் மனதிற்கு அபார மகிழ்ச்சியும், சாந்தியும் தருகிறது. ஆகவே ஜகதீஸ்வர மற்ற ஏகாதசி விரத மஹாத்மியத்தை கேட்டு மகிழ என் மனம் விழைகிறது தாங்கள் க்ருபை புரிய வேண்டும் என்று வேண்டினான். இதைக் கேட்டு மகிழ்ந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பார்த்தா ! இப்பொழுது தை-மாசி கிருஷ்ணபட்சத்தில் வரும் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை  உனக்குக் கூறுகிறேன் கவனமாக கேள்!! என்று கூறலுற்றார். ஒரு சமயம் பிகதாலப்ய ரிஷி, புலஸ்த்ய ரிஷியிடம் "முனிசிரேஷ்டரே!  பூமியில் மனிதர்கள், மற்றவர்களின் செல்வத்தை திருடுதல், அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், பிரம்மஹத்யா போன்ற மாபாதகமான பாவச்செயல்களைச் செய்தல் ஆகியவற்றை க...