Skip to main content

Posts

Showing posts from October 31, 2020

வியாச தேவரின் பிரார்த்தனை

ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம் 1 / பதம் 1 *************************************************************************   ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ஜன்மாதி அஸ்ய யதோ ’ ந்வயாத் இதரதஸ் சார்தேஷு அபிஜ்ஞ : ஸ்வராத் தேனே பிரஹ்ம ஹ்ருதாய ஆதி - கவயே முஹ்யந்தி யத் ஸூரய : தேஜோ - வாரி - ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரிஸர்கோ ’ ம்ருஷா தாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த - குஹகம் ஸத்யம் பரம் தீமஹி   மொழிபெயர்ப்பு   எம்பெருமானே , ஸ்ரீ கிருஷ்ணா , வசுதேவரின் புதல்வரே , எங்கும் வியாபித்திருக்கும் முழுமுதற் கடவுளே , தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன் . தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரபஞ்சங்களின் படைத்தல் , காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய காரணங்களுக்கு மூல காரணமாகவும் , பூரண உண்மையாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால் அவரை நான் தியானிக்கிறேன் . எல்லா தோற்றங்களையும் அவர் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ அறிந்துள்ளார் . மேலும் அவருக்கப்பால் வேறெந்த காரணமும் இல்லாததால் அவர் சுதந்திரமானவராவார் . முதல் ஜீவனான பிரம்ம...

யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

கிருஷ்ணர் மதுராவில் தேவகிக்குப் பிறந்து, பின்னர் கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்தார் என்பது தெரிந்த கதை. ஆனால் கிருஷ்ணர் தேவகிக்குப் பிறந்த அதே சமயத்தில் யசோதைக்கும் பிறந்தார் என்பது தெரியாத துணுக்கு. கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் விருந்தாவனத்தில் லீலைகள் புரியும்போது, அவர் விருந்தாவன கிருஷ்ணராகத் திகழ்கிறார். மதுராவிலும் துவாரகையிலும் அவர் வாசுதேவ கிருஷ்ணராகத் திகழ்கிறார். இஃது என்ன இரண்டு கிருஷ்ணர்? இரண்டு கிருஷ்ணர் இல்லை, ஒரே கிருஷ்ணர்தான், ஆனால் பா4வம் வேறு. கிருஷ்ணர் விருந்தாவனத்தில் வெளிப்படுத்தும் பா4வமும் இதர இடங்களில் வெளிப்படுத்தும் பா4வமும் வேறுபட்டவை. கிருஷ்ண லீலையை அறிந்தவர் எவரும் இதனை எளிதில் உணரலாம். விருந்தாவன ...