பந்தப்பட்ட ஆத்மாவின் முக்திக்கு உதவும் பொருட்டே கடவுள் குறிப்பாக மானிட ரூபத்தைப் படைத்துள்ளார் . எனவே மனித வாழ்வை துஷ்பிரயோகம் செய்பவன் நரகத்திற்கு வழியை அமைத்துக்கொள்கிறான் . புருஷத்வே சாவிஸ்தராம் என்று வேதங்கள் கூறுவது போல் , “ மனித உருவிலுள்ள வாழ்வின் நித்திய ஆத்மாவைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது ” வேதங்களும் பின்வருமாறு கூறுகின்றன . தாப்யோ காம் ஆனயத் தா அப்ருவன் ந வை நோ ‘ யம் அலம் இதி தாப்யோ ‘ ஸ்வம் ஆனயத் தா அப்ருவன் ந வை நோ ‘ யம் அலம் இதி தாப்ய - புருஷம் ஆனயத் தா அப்ருவன் ஸுக்ருதம் பத இந்த சுருதி மந்திரத்தின் பொருள் பின்வருமாறு : பசு , குதிரை முதலான தாழ்ந்த உயிரினங்கள் சிருஷ்டியின் நோக்கத்தை நிறைவேற்ற உண்மையில் பொருத்தமானவை அல்ல . ஆனால் கடவுளுடனான தனது நித்திய உறவைப் புரிந்து கொள்வதற்கு மனித வாழ்வு வாய்ப்பளிக்கிறது . எனவே ஒருவன் பௌதிக புலன்களை அடக்கி மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் . ஒருவன் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால் , பரமபுருஷர் மிகவும் மகிழ்ந்...