Skip to main content

Posts

Showing posts from March 4, 2023

கணவனும் மனைவியும் எந்தவொரு சூழ்நிலையிலும் பிரிய கூடாது

  புன்-நாம்னோ நரகாத் யஸ்மாத் பிதரம் த்ராயதே ஸுத: தஸ்மாத் புத்ர இதி ப்ரோக்த: ஸ்வயம் ஏவ ஸ்வயம்புவா புத் என்ற நரகத்தில் தந்தை தண்டனை பெறுவதிலிருந்து மகன் அவரை விடுவிக்கிறான். இதனால் அவன் புத்திரன் என்று அழைக்கப்படுகிறான். இந்த நியதியின்படி, தாய்க்கும் தந்தைக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்படும் பொழுது, புத்திரனானவன் தன் தந்தையைத் தான் விடுதலை செய்கிறானேயொழிய தாயை அல்ல. இவ்வாறாக வேத இலக்கியத்தில் விவாகரத்து என்பதே கிடையாது. ஒரு மனைவி தன் கணவனிடம் எப்பொழுதும் விசுவாசமும், பதிபக்தியும் கொண்டிருக்கும்படி பயிற்சி அளிக்கப்படுகிறாள். ஏனெனில், எந்த ஒரு வெறுக்கத்தக்க பௌதிக சூழ்நிலையிலிருந்தும் விடுதலையடைய இது அவளுக்கு உதவியாக இருக்கும். புத்ரோ நயதி நரதேவ யம-க்ஷயாத் என்று இச்சுலோகம் தெளிவாகக் கூறுவது போல், “புத்திரன் யமராஜனின் காவலிலிருந்து தன் தந்தையைக் காப்பாற்றுகிறான்”. அது, புத்ரோ நயதி மாதரம், “புத்திரன் தன் தாயைக் காப்பாற்றுகிறான்” என்று ஒருபோதும் கூறவில்லை. வித்தளிக்கும் தந்தைதான் விடுவிக்கப்படுகிறார். கிடங்கின் அதிகாரியான தாய் அல்ல. ஆகவே கணவனும் மனைவியும் எந்த சூழ்நிலையிலும் பிரியக்கூ...