Skip to main content

Posts

Showing posts from September 3, 2023

ஹரி நாமாம்ருதம்

  ஏதன் நிர்வித்யமானானாம் இச்சதாம் அகுதோ - பயம் யோகினாம் ன்ரூப நிர்ணீதம் ஹரேர் நாமானுகீர்தனம் மொழிபெயர்ப்பு மகாராஜனே , பெரும் அதிகாரிகள் பகவானின் புனித நாமங்களை இடைவிடாமல் பாடியவண்ணமாக இருக்கின்றனர் . அவர்களின் வழியைப் பின்பற்றுவதே சந்தேகமும் , பயமும் அற்றதும் , அனைவருக்கும் வெற்றி அளிக்கக் கூடியதுமான வழியாகும் . இவ்வழி , அனைத்து ஜட ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களுக்கும் , ஜட இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் , மற்றும் உன்னத அறிவின் பயனாக சுய திருப்தி அடைந்துள்ளவர்களுக்கும் ஏற்றதாகும் . பொருளுரை முகுந்தன் மீதுள்ள பற்றை அடையவேண்டியதன் அவசியம் முந்திய பதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது . பல்வேறு மனிதர்கள் வெவ்வேறு வகையான தொழில்களில் வெற்றி பெற விரும்புகின்றனர் . பௌதிக வாதிகள் பொதுவாக ஜட இன்பங்களை முழுமையாக அனுபவிக்க விரும்புகின்றனர் . அவர்களை அடுத்துள்ளவர்கள் ஆன்மீகிகள் எனப்படுகின்றனர் . இவர்கள் பௌதிக இன்பத்தின் தன்மையைப் பற்றிய முழு அறிவைப் பெற்றிருப்பதால் , இத்தகைய மாயைக்குட்பட்டுள்ள வாழ்வ...