வழங்கியவர் : ஜீவன கௌர ஹரி தாஸ் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருப்பதே ஹம்பி என்னும் திருத்தலம் . இந்த வனம் வானரப் படைகளின் வசிப்பிடமாகத் திகழ்ந்ததால் கிஷ்கிந்தா க்ஷேத்திரம் என்றும் , பார்வதிதேவி கடுந்தவம் புரிந்ததால் பம்பா தீர்த்தம் என்றும் அறியப்படுகிறது . ஹனுமானின் பிறப்பிடமான இவ்விடத்திற்கு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு , நித்யானந்த பிரபு , பலராமர் ஆகியோரும் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . கிஷ்கிந்தா க்ஷேத்திரம் ஹம்பி நகரமானது விஜயநகர பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது . இன்று இந்நகரம் பாரம்பரிய கட்டிடக் கலை , நினைவுச் சின்னங்கள் , குகைகள் , கற்கோயில்கள் , பசுமையான வளம் , நீரோடை என பலவற்றிற்கும் புகழ் பெற்றுள்ளது . புராண காலத்தில் தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் ( பஞ்சவடி ) பகுதியிலிருந்து ஹனுமான் அவதரித்த ஹம்பி வரை கிஷ்கிந்தையாக அறியப்பட்டது . பகவான் இராமசந்திரர் கிஷ்கிந்தையில்...