பணத்தைத் திரட்டுவதன் மூலமாக , ஜட உலகில் ஒருவன் திமிர் பிடித்தவனாகாமல் , தனது வாழ்க்கைத் தேவையை சுலபமாகவும் , நேர்வையுடனும் சம்பாதிக்க வேண்டும் . பொய் புரட்டுகளின் மூலமாய் சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாவதை விட , நேர்மையான வாழ்க்கைத் தேவைக்காக ஒரு கூலியாக இருப்பது சிறந்தது . நேர்மையான உழைப்பால் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தனாக ஆவதில் குற்றமில்லை . ஆனால் செல்வம் திரட்டுவதற்காக , வாழ்க்கைக்குரிய நேர்மையான வழியை ஒருவன்தியாகம் செய்து விடக் கூடாது . இத்தகைய முயற்சி பக்தித் தொண்டிற்கு தீங்கிழைப்பதாகும் .