ஸ்ரீல பக்தி சித்தாந்த ஸரஸ்வதி தாகூர் வழங்கியவர்: திருமதி. கீத கோவிந்த தாஸி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சித்தாந்தத்திற்காகப் போராடிய பக்திசித்தாந்தர் தோற்றம் 🍁🍁🍁🍁🍁 1874ல் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி அவர்கள் ஒரிசா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஜகந்நாத பூரியில் மாபெரும் வைஷ்ணவ ரான ஸ்ரீல பக்திவினோத தாகூருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். பிமல பிரஸாத் என்று பெயரிடப்பட்ட அவர், பிற்காலத்தில் மிகுந்த அறிவாளியாகவும் பகவானின் புகழை உலகெங்கும் பரப்பும் உயர்ந்த போதகராகவும் திகழ் வார் என ஜோதிடர்கள் கூறினர். அதுமட்டுமின்றி, ஒரு மஹா புருஷருக்கான அனைத்து இலட்சணங்களும் அடங்கிய வேறொரு ஜாதகத்தை அதுவரை பார்த்ததேயில்லை என்றும் அவர்கள் கூறினர். ஜகந்நாதரின் அருள் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பிமல பிரஸாத் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது வருடந் தோறும் கொண்டாடப்படும் ஜகந்நாதரின் ரதயாத்திரை திருவிழா வந்தது. ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன் வந்த ரதம், உடனே நின்று விட்டது. பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் ரதம் நகரவில்லை. பகவான் ஜகந்நாதர் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன்பு நிற்க விரு...