மன்னர் ருக்மாங்கதன் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 மன்னன் ரிதத்வஜாவுக்குப் பின் அயோத்தியை அரசாண்டவன் ருக்மாங்கதன். முற்பிறவியில் அவன் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். ஒரு அந்தணருடன் ஏற்பட்ட நட்பால் அவருடன் தீர்த்த யாத்திரை சென்று, ஏகாதசி விரதத்தை அனுசரித்ததால் கிடைக்கப் பெற்ற புண்ணியத்தால் மறுபிறவியில் பார்புகழும் மன்னனாய்ப் பிறந்தான். அவனது பட்டத்து ராணி சந்தியாவளி, இளவரசன் தர்மாங்கதன். அரசன் ஆழ்ந்த விஷ்ணு பக்தன். மன்னன் எவ்வழி, மக்களும் அவ்வழி என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைபிடிக்க வைத்தான். அதன்படி ஏகாதசி விரதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தான். விரதநாளுக்கு முன், யானை மீதேறி ராஜாங்கம் முழுதும் ஏகாதசி தினம் என்றைக்கு வருகிறது என முரசொலித்து அறிவிக்கச் செய்வான். அன்றைக்கு 8-லிருந்து 85 வயதானவர்கள் வரை அனைவரும் உள்ளத்தூய்மையுடன் விரதமேற்க வேண்டும் என ஆணையிடுவான். அரச கட்டளையால் மக்களும் உறுதியுடன் விரதம் மேற்கொண்டதால், யமதர்மராஜனுக்கு வேலை பளு அறவே குறைந்து விட்டது. பாபம், புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் சித்தி...