Skip to main content

Posts

Showing posts with the label Lord Sri Guruvayurappan Lila/ ஶ்ரீ குருவாயூரப்பன் லீலைகள்

கொம்பு முளைத்த தேங்காய்

ஶ்ரீ குருவாயூரப்பன் லீலைகள் கொம்பு முளைத்த தேங்காய் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 முன்னொரு சமயத்தில் கிராமவாசி ஒருவர் தனது தோட்டத்தில் பல தென்னங்கன்றுகளை நட்டார். தனது தோட்டத்தில் விளைந்த தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் அறுவடையில் வரும் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய் சங்கல்பம் எடுத்து கொண்டார். மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவன் மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் கோணிப் பையில் சேகரித்து கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் பயணித்தான். போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து "கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு" என்று அவரை மிரட்டினான். அந்த கிராமவாசியோ, "இந்த கோணிப் பையில்  தேங்காய்கள் மட்டுமே உள்ளன. அவை குருவாயூரப்பனுக்கு எனது காணிக்கையாக எடுத்து செல்கிறேற். இது நைவேத்திய தேங்காய்  இதை தர முடியாது' என்று கூறினார்.  கொள்ளைக்காரன் அலட்சியமாக, "குருவாயூரப்பனின் தேங்காய் என்று எங்காவது எழுதி இருக்கிறதா? இல்லை அதற்குக் என்ன பிரத்யேகமாக  கொம்புகள் இருக்கிறதா என்ன? என்று கூறிக் கொண்டே கிராமவாசியின் கைகளில் இருந்து கோணி பையைப் பற்றி இழுத்தான். கோண...

கிருஷ்ணருக்கு பிரியமான மஞ்சாடி விதை.

  கிருஷ்ணருக்கு பிரியமான மஞ்சாடி விதை. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குந்துமணியை (மஞ்சாடி விதை) நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும் குழந்தை வரம் வேண்டியும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் மீண்டும் அதிலேயே போட்டு விடுகிறார்கள். குருவாயூர் கோயிலில் இந்த விசேஷமான பிரார்த்தனையின் பின்னணியில் ஒரு சுவையான கதை உண்டு.  முன்னொரு காலத்தில் ஒரு வயதான ஏழைப் பெண்மணிக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம், அவர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் வசித்து வந்தார். பண வசதி இல்லை. ஆனால், ஏதாவது காணிக்கை கொடுத்து பாலகிருஷ்ணனைத் தரிசிக்க விரும்பினார். அவர் வீட்டில் இருந்த மஞ்சாடி (குந்துமணி) மரத்திலிருந்து உதிரும் குந்துமணிகளைச் சேகரித்துச் சுத்தம் செய்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தார். ஒருநாள் ஆவல் மிகுதியில் கண்ணனைக் காண நடந்தே செல்லத் தீர்மானித்து. பயணம் மேற்கொண்டார். ஒரு மண்டலம் பயணம் செய்து அவர் குருவாயூரை அடைந்தபோது, கோயிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அன்று அந்த ஊர் அரசன் தன் பக்திய...