Skip to main content

Posts

பக்தர்களை நிந்திப்பது மிகவும் ஆபத்தானது

 

தூய பக்தித் தொண்டு

 

அனைவரும் பங்குகொள்ளும் ஹரி நாம சங்கீர்த்தனம்

 

நான்கு குமாரர்கள்

  நான்கு குமாரர்கள் ( சனகர், சனாதனர், சனந்தனர், மற்றும் சனத்குமாரர் ) வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுளின் ஒரு குறிப்பிட்ட சக்தி ஒரு குறிப்பிட்ட உயிர்வாழிகட்கு அளிக்கப்படும் பொழுது அவர்கள் "ஆவேச அவதாரங்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்.  நான்கு குமாரர்களும் குறிப்பாக முழுமுதற் கடவுளின் ஞான சக்தியின் பிரதிநிதிகளாவர்.  இவர்கள் பகவானைப் பற்றிய உன்னத அறிவை மிகத் தெளிவாக விளக்கியதால் அனைத்து சாதுக்களும் ஒரே நேரத்தில் இந்த அறிவை எவ்வித சிரமமும் இல்லாமல் கிரகித்துக் கொள்ள முடிந்தது.  நான்கு குமாரர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனக்குள்ளேயே முழுமுதற் கடவுளை காண முடியும். படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மதேவர் அவரது மனதின் சக்தியில் இருந்து நான்கு புதல்வர்களை படைத்தார்.  அவர்கள் நான்கு குமாரர்கள் எனப்பட்டனர்.  பிரபஞ்சத்தில்  பிரஜைகளை பெருக்குவதன் பொருட்டு  பிரம்மதேவர் பிறப்பித்த கட்டளையைக் கேட்டதும் குமாரர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் வாழ்நாள் முழுவதும் இல்லறத்தில் ஈடுபடாமல் பிரம்மச்சாரிகளாகவே  இருக்க...

சட்- திலா ஏகாதசி

  சட்- திலா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁 தை-மாசி கிருஷ்ண பட்சத்தில்வரும் ஏகாதசி திதியை சட்-திலா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். சட்-திலா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம். மனதிற்கு மிகவும் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் ஏகாதசி விரத மஹாத்மியத்தின் உன்னதக் கதைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்டு மகிழ்ந்த அர்ஜூனன், பக்தியுடனும், சிரத்தையுடனும் வணங்கி "மதுசூதனா" தாங்கள் கூறிய ஏகாதசி விரத மஹாத்மியம் என் மனதிற்கு அபார மகிழ்ச்சியும், சாந்தியும் தருகிறது. ஆகவே ஜகதீஸ்வர மற்ற ஏகாதசி விரத மஹாத்மியத்தை கேட்டு மகிழ என் மனம் விழைகிறது தாங்கள் க்ருபை புரிய வேண்டும் என்று வேண்டினான். இதைக் கேட்டு மகிழ்ந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பார்த்தா ! இப்பொழுது தை-மாசி கிருஷ்ணபட்சத்தில் வரும் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை  உனக்குக் கூறுகிறேன் கவனமாக கேள்!! என்று கூறலுற்றார். ஒரு சமயம் பிகதாலப்ய ரிஷி, புலஸ்த்ய ரிஷியிடம் "முனிசிரேஷ்டரே!  பூமியில் மனிதர்கள், மற்றவர்களின் செல்வத்தை திருடுதல், அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், பிரம்மஹத்யா போன்ற மாபாதகமான பாவச்செயல்களைச் செய்தல் ஆகியவற்றை க...

சிவபெருமான்

  சிவபெருமான் வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 படைப்பின் ஆரம்பத்தில் பிரஜைகளை அதிகப்படுத்துவது மிகவும் அவசியமாக இருந்தது. இதனால் பிரம்மதேவர் தனது மகன்களாக ஒவ்வொருவரையும் படைத்து பிரஜைகளை அதிகமாக்கும் படி கட்டளையிட்டார். எனினும் அவரது மகன்களான நான்கு குமாரர்களும் அவரது கட்டளையை மறுத்துவிட்டனர். ஏனென்றால் அவர்கள் வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரியாகவே இருந்து பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தி சேவையாற்ற விரும்பினர். இதனால் கடும் கோபமடைந்தார் பிரம்மதேவர். அவரது கோபத்தின் விளைவாக அவரது   இரு புருவங்களுக்கிடையில் இருந்து சிவபெருமான் அல்லது ருத்திரர் தோன்றினார்.  "சிவ" என்ற சொல்லுக்கு அனைத்து மங்களங்களையும் கொண்டவர் என்று பொருள்படுகிறது.  சிவபெருமான் தமோ குணத்தின் (அறியாமை குணத்தின்) அதிபதியாக இருந்து இறுதியில் பிரபஞ்சத்தை அழிக்கும் பொறுப்பில் இருக்கிறார். அவர் நிறைய விசேஷ சக்திகளை தன்னகத்தே கொண்டிருக்கிறார். உதாரணமாக ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர் . அப்போது கடலிலிருந்து உண்டான விஷத்தை உலக நன்ம...

பௌதிக நோய்க்கான வைத்தியம் நித்யம் ஶ்ரீமத் பாகவதம் பாராயணம் மட்டுமே

 

ஶ்ரீமத் பாகவதத்தின் நோக்கம்

 

நித்யம் ஶ்ரீமத் பாகவதம் கேட்டல்

 

சிந்தனை, விருப்பம், செயல் , உயர்வு

  சிந்தனை, விருப்பம், செயல் , உயர்வு 💐💐💐💐💐💐💐💐💐 ஏதத் தி ஆதுர-சித்தானாம் மாத்ரா-ஸ்பர்சேச்சயா முஹு: பவ-ஸிந்து-பிலவோ த்ருஷ்டோ ஹரி-சர்யானுவர்ணனம் மொழிபெயர்ப்பு **************** இந்த்ரிய போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற இடைறாத ஆசைகளில் மூழ்கியிருப்பவர்களால், பரம புருஷரின் உன்னதமான செயல்களை இடைவிடாமல் பாடுவதன் மூலம் அறியாமை எனும் கடலைக் கடந்துவிட முடியும் என்பதை எனது சொந்த அனுபவத்தினால் நான் உணர்ந்து கொண்டேன். பொருளுரை ************* ஜீவராசியால் சிறிது நேரம்கூட அமைதியாக இருக்க முடியாது. அவன் எதையாவது செய்து கொண்டோ, நினைத்துக் கொண்டோ அல்லது எதைப் பற்றியாவது பேசிக்கொண்டோதான் இருப்பான். பௌதிகவாதிகள் பொதுவாக தங்களது புலன்களை திருப்திப்படுத்தும் விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால் இவ்விஷயங்கள் மாயா சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இவை எவ்வித திருப்தியையும் அளிப்பதில்லை. எனவே அவர்கள் கவலைகளும், ஆவல்களும் நிறைந்தவர்களாக மாறிவிடுகின்றனர். இது மாயா அல்லது பொய்த் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. திருப்தி அளிக்காத பொருளை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இ...

ஶ்ரீ கௌர நித்யானந்தேர தயா

 ஶ்ரீ கௌர நித்யானந்தேர தயா வழங்கியவர் :- லோசன தாஸ் தாகூர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🍁🍁🍁🍁 பரம கருண பஹு துஇ ஜன  நிதாய் கௌரசந்த்ர  ஸப அவதார ஸார ஷி ரோமணி  கேவல ஆனந்த கந்த மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ  நித்யானந்தரும் பகவான் ஶ்ரீ கௌரசந்திரரும் மிகமிக கருணை வாய்ந்தவர்கள், அவர்கள் எல்லா அவதாரங்களின் சாரமாவர். ஆனந்தத்தை மட்டுமே வழங்கக்கூடிய கீர்த்தனம் மற்றும் நர்த்தன வழிமுறையை அறிமுகப்படுத்தியது இந்த அவதாரங்களின் விசேஷ முக்கியத்துவமாகும் பதம் 2 🍁🍁🍁🍁 பஜோ பஜோ பாஇ  சைதன்ய நிதாய்  ஸுத்ரிட  விஷ்வாஸ கரி  விஷய சாடியா ஸே ரஸே மஜியா  முகே போல ஹரி ஹரி மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁 அன்புள்ள சகோதரர்களே பகவான் சைதன்யரையும் நித்யானந்தரையும் திடமான உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வழிபடுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன். இந்த வழியில் கிருஷ்ண உணர்வை அடைய ஒருவன் விரும்பினால், அவன் தன்னுடைய புலனின்ப ஈடுபாடுகளைத் துறக்க வேண்டும். பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தரின் வழிபாட்டில் மூழ்கி, எந்த பௌதிக நோக்கமும் இன்றி, "ஹரே கிருஷ்ண ஹரி ஹரி என்று உச்சரிப்பீராக ப...

பகவான் புத்தராக அவதரித்த நோக்கம்

 பகவான் புத்தராக அவதரித்த நோக்கம் 🍁🍁🍁🍁🍁🍁 தத: கலௌ ஸம்ப்ரவ்ருத்தே ஸம்மோஹாய ஸுர த்விஷாம் புத்தோ நாம்னாஞ்ஜன-ஸுத:கீகடேஷு பவிஷ்யதி தத—அதன் பிறகு; கலௌ—கலி யுகம்; ஸம்ப்ரவ்ருத்தே—விளைந்ததால்; ஸம்மோஹாய—ஏமாற்றும் நோக்கத்திற்காக; ஸுர—ஆத்திகர்கள்; த்விஷாம்—பொறாமை கொண்டவர்கள்; புத்த:—பகவான் புத்தர்; நாம்னா—எனும் பெயர் கொண்ட; அஞ்சன-ஸுத:—அவரது தாயார் அஞ்சனையாவார்; கீகடேஷு—கயா (பீகார்) மாநிலத்தில்; பவிஷ்யதி—நிகழும். மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁 பிறகு, கலி யுக ஆரம்பத்தில், கயா மாநிலத்தில், அஞ்சனாவின் புதல்வராக புத்த பகவான் தோன்றுவார். நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களிடம் பொறாமை கொண்டவர்களை தந்திரமாக வழிப்படுத்துவதே அவருடைய அவதார நோக்கமாகும். பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுளின் ஒரு சக்தி வாய்ந்த அவதாரமான பகவான் புத்தர், அஞ்சனா தேவியின் புதல்வராக கயா (பீகார்) மாநிலத்தில் தோன்றினார். அவர் தமது சொந்த கருத்தான அகிம்சையைப் பிரசாரம் செய்து, வேதங்களில் அனுமதிக்கப்பட்ட மிருக பலியையும் கூட நிராகரித்தார். புத்த பகவான் தோன்றிய சமயத்தில், மக்கள் பொதுவாக நாஸ்திகத் தன்மை கொண்டவர்களாகவும், மிருக மாமிசத்தை விரும...

ஐந்து விதமான கடன்கள்

  ஐந்து விதமான கடன்கள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து விதத்தில் கடன்பட்டுள்ளனர். ****************************** முதலாவதாக, தேவர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர். நமது உடலின் ஒவ்வோர் அங்கமும் அசைவும் பல்வேறு தேவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால், நாம் முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களுக்கும் கடன்பட்டுள்ளோம். தேவர்களின் கடனைத் திருப்பிச் செலுத்து வதற்கு யாகங்கள் புரிய வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் தேவர்களுக்கான கடனை அடைப்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர். வேத சாஸ்திரங்களைப் படிப்பதன் மூலம் ரிஷிகள் திருப்தியடைகின்றனர். பொதுவாக கலி யுக மக்கள் வேத சாஸ்திரங்களை வயதான காலத்தில் படிப்பதற்குக்கூட தயங்குகின்றனர். மூன்றாவதாக, பித்ருக்களுக்குக் கடன்பட்டு...