சட்- திலா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁 தை-மாசி கிருஷ்ண பட்சத்தில்வரும் ஏகாதசி திதியை சட்-திலா ஏகாதசியாக கொண்டாடுவர். சட்-திலா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம். மனதிற்கு மிகவும் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் ஏகாதசி விரத மஹாத்மியத்தின் உன்னதக் கதைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்டு மகிழ்ந்த அர்ஜூனன், பக்தியுடனும், சிரத்தையுடனும் வணங்கி "மதுசூதனா" தாங்கள் கூறிய ஏகாதசி விரத மஹாத்மியம் என் மனதிற்கு அபார மகிழ்ச்சியும், சாந்தியும் தருகிறது. ஆகவே ஜகதீஸ்வர மற்ற ஏகாதசி விரத மஹாத்மியத்தை கேட்டு மகிழ என் மனம் விழைகிறது தாங்கள் க்ருபை புரிய வேண்டும் என்று வேண்டினான். இதைக் கேட்டு மகிழ்ந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பார்த்தா ! இப்பொழுது தை-மாசி கிருஷ்ணபட்சத்தில் வரும் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை உனக்குக் கூறுகிறேன் கவனமாக கேள்!! என்று கூறலுற்றார். ஒரு சமயம் பிகதாலப்ய ரிஷி, புலஸ்த்ய ரிஷியிடம் "முனிசிரேஷ்டரே! பூமியில் மனிதர்கள், மற்றவர்களின் செல்வத்தை திருடுதல், அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், பிரம்மஹத்யா போன்ற மாபாதகமான பாவச்செயல்களைச் செய்தல் ஆகியவற்றை க...