உபாக்யானே உபதேசம் ( அருளியவர் :- ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 இரவில் சூரியன் 🔆🔆🔆🔆🔆🔆🔆 ஒரு முறை செல்வ செழிப்பு மிக்க நிலக்கிழார் ஒருவர், அமாவாசை இரவன்று வானில் சூரியனை காண வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அவரது துதிபாடுபவர்கள் சிலர், "ஐயா! நீங்கள் ஆசை கொண்டால் அது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம், அனைவரும் உங்கள் புகழ் பற்றி பேசுவர்", என்று கூறினர். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், ஒரு மண்ணெண்னை விளக்கை விண்ணில் உயர்த்தி பிடித்தபடி, "ஐயா இப்போது வானில் சூரிய ஒளி போன்ற வெளிச்சம் தெரிகிறது பாருங்கள்", என்று கூறினான். அதற்கு இன்னொருவன், “இவ்வளவு சிறிய விளக்கு, சூரிய ஒளியை போன்று வெளிச்சத்தை தராது. ஒரு கோடி மெழுகுவருத்திகளை ஒரே சமயத்தில் ஏற்றினால், அதன் ஒளி சூரிய வெளிச்சம் போன்று இருக்கும்", என்று கூறினான். அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் திருப்தியடையவில்லை. அறிவியல் தெரிந்த சிலர், சக்திவாய்ந்த மின் விளக்கு போன்ற ஏற்பாடும் செய்திருந்தனர். ஆனால் எந்த முயற்சியும் வெற்றி பெறவில...