Skip to main content

Posts

அஜா - அன்னதா ஏகாதசி

பாத்ரபத மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அஜா - அன்னதா ஏகாதசியாக கொண்டாடுவர். அஜா - அன்னதா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.     ஸ்ரீ யுதிஷ்டிரர் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம்- "ஹே ! ஜனார்தனா, இவ்வுலக ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாத்து ரட்சிப்பவரே, பாத்ரபத மாதத்தின் (ஆகஸ்ட் -செப்டெம்பர்) கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயரையும், அதன் மகத்துவத்தையும் விரிவாக எனக்கு எடுத்துரையுங்கள்" என்று வேண்டி நின்றார். பகவான் ஶ்ரீ கிருஷ்ண தர்மபுத்ரரின் வேண்டுகோளுக்கு இணங்கி, பதிலளிக்கையில் "ஹே! ராஜன், நான் சொல்லுவதை மிகவும் கவனத்துடன் கேள்,  பாபங்களைப் போக்கும் இந்த புண்ய ஏகாதசி அஜா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, புலன்களுக்கு அதிபதியான ரிஷிகேசரை வழிபட்டால், பாபத்தின் கர்ம விளைவுகளிலிருந்து விடுபடுவர். அஜா ஏகாதசியின் மஹிமையை காதால் கேட்டாலே, கேட்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறும்.                                    ...

அபைஷுனம் -

 

அக்ரோத

 

உலகை வென்ற உத்தமர் ஸ்ரீல பிரபுபாதர்

  உலகை வென்ற உத்தமர் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் வில்லெடுத்து வாளெடுத்து வானைப் பிளக்கும் கோஷமெடுத்து மன்னர்களை மண்டியிடச் செய்து மண்ணையும் பொன்னையும் வென்ற மன்னர்கள் பலர்; வில்லின்றி வாளின்றி மண்ணின்றி பொன்னின்றி உலகையே வென்ற உத்தமர் ஒருவரே; அவரே தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். உடல் பலத்தால் உலகை வென்ற வேந்தர்கள் பலர் இருக்க, ஆத்ம பலத்தால் எல்லா தரப்பட்ட மக்களையும் உண்மையாக வென்றவர் பிரபுபாதரே. அரசர்கள் அபகரித்து ஆட்சி செய்த இடங்களில் மக்கள் மனமுவந்து உளமாற அவர்களை ஏற்றார்களா என்று கூற முடியாது; ஆனால், பிரபுபாதரின் பக்தர்களோ உடல், பொருள், ஆவி அனைத்தையும் உளமாற அர்ப்பணித்து சேவை செய்தனர் என்பதால், பிரபுபாதருக்கு நிகரான வேந்தர் வரலாற்றில் யாருமே கிடையாது என்று கூறலாம். பன்னிரண்டு வருடத்தில் பாரெங்கும் பயணம் செய்து பக்தியை பிரச்சாரம் செய்து பல்லாயிரக்கணக்கான உண்மையான சீடர்களை உருவாக்கியவர் வரலாற்றில் வேறு யாரும் கிடையாது. ஸ்ரீல பிரபுபாதர் தம்முடைய பூர்வீக ஆச்சாரியர்களின் முழுமையான பிரதிநிதியாக இருந்தார், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன படைக்க...

ஸ்ரீ நாம கீர்த்தனம்

யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர ஸ்ரீ நாம கீர்த்தனம் 🔆🔆🔆🔆 யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர  கோகுல ரஞ்சன கான  கோபிபராண தன மதன மனோஹர  காலிய தமன விதான அமல ஹரிநாம் அமிய விலாசா, விபின புரந்தர நவீன நாகர போர  பம்சிவதன சுவாசா ப்ரஜ-ஜன-பாலன அசுர-குல-நாஷன  நந்த கோதன ராகோ வாலா  கோவிந்த மாதவ நவநீத தாஸ்கர  சுந்தர நந்த கோபால யாமுனா தடசர கோபிவசனஹர  ராஸ ரஸிக கிருபாமோய  ஸ்ரீராதா வல்லப ப்ருந்தாவன நடபர  பகதி விநோதாஸ்ரய பகவான் க்ருஷ்ணர் யசோதையின் அருமைப்புதல்வர், விரஜவாசிகளின் உன்னத திவ்ய காதலன், கோகுலத்தின் ஒளிவிளக்கு, கோபிகளின் உயிர்செல்வம், மன்மதனின் மனத்தையும் அவர் கவருகின்றவர். காலியனெனும் பாம்பைத்  தண்டித்தவர். அப்பழுக்கற்ற துய பகவான் ஹரியின் புனித நாமங்கள் இனிமை நிறைந்தவை, அமிர்தமயமான லீலைகள் நிறைந்தவை, க்ருஷ்ணர் விரஜ மண்டலத்திலுள்ள பன்னிரு காடுகளுக்கு தலைவன். எப்போதும் இளமையானவர், காதலர்களுள் சிறந்தவர். புல்லாங் குழலை  ஊதிக்கொண்டிருப்பவர் மிக அழகிய ஆடைகளை  உடையவர்.. விரஜவாசிகளின் காவலன் பல்வேறு அசுர  குலங்களை அழிப்பவர். நந்த மஹாராஜாவின் ப...

பஜுஹரே மன ஸ்ரீ நந்த-நந்தன

பஜுஹரே மன ஸ்ரீ நந்த-நந்தன (கோவிந்த தாஸ கவிராஜ்) 1.  பஜஹுரே மன ஸ்ரீ-நந்த-நந்தன அபய-சரணார விந்தரே துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே தரோஹோ ஏ பவ-ஸிந்து ரே  2.  ஸீத ஆதப பாத பரிஷண  ஏ தின ஜாமினி ஜாகி ரே  பிபலே ஸேவினு க்ருபண துரஜன சபல சுக-லப லாகி ரே 3. ஏ தன யெளவன புத்ர பரிஜன இதே கி ஆசே பரதீதி ரே கமல-தல-ஜல ஜீவன டலமல பஜஹு ஹரி-பத நீதி ரே 4.  ஸ்ரவண கீர்தன ஸ்மரண வந்தன பாத-ஸேவன தாஸ்ய ரே பூஜன சகீ-ஜன ஆத்ம-நிவேதன கோவிந்த-தாஸ- அபிலாஷரே 1.ஓ மனமே, நந்த மகராஜ குமாரனின் தாமரைப் பாதங்களை வணங்கு, அது ஒருவனை அச்சமற்றவனாக மாற்றும், கிடைப்பதற்கரிய இந்த மானுட பிறவியை அடைந்ததால், சாதுக்களின் தொடர்பின் மூலம் இந்த பிறவிக் கடந்துவிடு. கடலை 2. காற்று, மழை, குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றினால் அவதிப்பட்டு, இரவு, பகல் உறக்கமல்லாமல் இருக்கிறேன், சிறிது நிலையற்ற இன்பத்திற்காக மோசமான, போக்கிரிதனம் கொண்ட மனிதர்களுக்கு உபயோகமற்ற சேவையை புரிகிறேன். 3. குடும்ப அங்கத்தினர்கள், குமாரர்கள், இளமை, செல்வம் போன்றவற்றில் உண்மையான மகிழ்ச்சிக்கு என்ன உத்தரவாதம்? இந்த வாழ்க்கை தாமரை இதழ் மேல் உள்ள ஒரு சொட்டு நீரைப் போல...

மதுராஷ்டகம்

  அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் । ஹ்ருதயம் மதுரம் கமனம் மது4ரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 1 ॥ வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் வலிதம் மதுரம் । சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 2 ॥ வேணு-ர்மதுரோ ரேணு-ர்மதுர: பாணி-ர்மதுர: பாதௌ மதுரௌ । ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 3 ॥ கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் । ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 4 ॥ கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் । வமிதம் மதுரம் ஶமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 5 ॥ குஞ்ஜா மதரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா । ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 6 ॥ கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் முக்தம் மதுரம் । த்ருஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 7 ॥ கோபா மதுரா காவோ மதுரா யஷ்டி ர்மதுரா ஸ்ருஷ்டி ர்மதுரா । தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 8 ॥ ॥ இதி ஶ்ரீமத்வல்லபாசார்யவிரசிதம் மதுராஷ்டகம் ஸம...