வழங்கியவர்: திருமதி. கிருஷ்ண காமினி தேவி தாஸி மிக உயர்ந்ததும் தொன்மை மிக்கதுமான வைஷ்ணவ தர்மம், ஆழமான பக்தி உணர்வுகள் மற்றும் நுணுக்கமான விளக்கங்களுடன் தெய்வீக மணங் கமழும் பொலிவு பெற்றதாகும். தனக்கு வேண்டியவற்றை எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வார் என்பதை உணர்ந்து, அவரது பாத கமலங்களுக்குத் தொண்டு புரிவதே தமது தொழில் என்று வாழ்வதே சரணாகதி எனப்படும் உயர்ந்த தத்துவமாகும். இதை நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக இம்மண்ணுலகில் தோன்றிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒன்பதாவது ஆழ்வாராக ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாளின் பெருமையை இங்கு சற்று பார்ப்போம். ஆண்டாளின் அவதார நோக்கம் லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷிகேஷ: என்று உபநிஷத் சொல்கின்றது. அதாவது, பகவானின் ஒவ்வொரு அவதாரத்தின்போதும் அவருடைய பத்தினிகளும் உடன் அவதரிக்கின்றனர். பகவானின் துணைவியர் மூவர்–திருமகள், மண்மகள், ஆயர் மடமகள். திருமகள் என்பது லக்ஷ்மியையும், மண்மகள் என்பது பூமிப் பிராட்டியையும், ஆயர் மடமகள் என்பது நீளா தேவியையும் குறிக்கும். இரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமிப் பிராட்டியை சமுத்திரத்தினுள் கொண்டு சென்று மறைத்து வைத்தான். அப்போது பெருமாள் வராஹ அவதார...