உண்மையாக ஆன்மீக உணர்வில் நிலைபெறும் பொழுது நம்முடைய குணங்களில் அல்லது அறிகுறிகளில் மாற்றங்கள் தோன்றும் . அந்த அறிகுறிகள் யாவை ? ஒருவன் தன்னுடைய ஆன்மீக உணர்வில் நிலை பெற்றுவிட்ட பிறகு , அவனுக்கென்று ஆசையோ , வருத்தமோ இருக்காது . வருத்தம் என்பது இழப்பிற்காக , ஆசை என்பது ஒன்றை அடைவதற்காக . இரண்டு விதமான வியாதிகள் இந்த பௌதிக உலகை விவரிக்கிறது : நம்மிடம் எது இல்லையோ அதற்காக நாம் ஆசைப்படுவது , “ எனக்கு இந்தப் பொருட்கள் கிடைத்தால் நான் இன்பமாக இருப்பேன் . என்னிடம் பணம் இல்லை , அதனால் எனக்கு ஒரு பத்து லட்ச ரூபாய் கிடைத்தால் , எனக்கு இன்பமாக இருக்கும் ”. நம்மிடம் பத்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் . எப்படியோ அது தொலைந்துவிட்டது . அப்பொழுது , “ அய்யய்யோ பணத்தை தொலைத்துவிட்டேனே ” என்று அழுகிறோம் . நாம் பணம் சம்பாதிப்பதற்காக ஆசைப்படுவது என்பது ஒரு விதமான துன்பம் . அதே போல் தான் இழப்பிற்காக வருத்தப்படுவதும் ஒருவிதமான துன்பம் . ஆனால் நாம் பிரம்ம பூத நிலையில் இருக்கும் பொழுதோ ஆசைப்படுவ...