கிருஷ்ண புலி ஸேய் ஜீவ-அனாதி-பஹிர் முக அதயேவ மாயா தாரே தேய ஸம்ஸார-துக்க” “கிருஷ்ணரை மறந்துவிட்டு காலங்காலமாக மனிதன் பிரபுவின் புற அம்சத்தினால் வசீகரிக்கப்பட்டு வந்துள்ளான். ஆகையால் பொய்த் தோற்றமான மாயை அவனது ஜடவாழ்வில் எல்லாவிதமான துயரங்களையும் தந்துள்ளது.” மனிதன் தன் அமைப்பில் ஆத்மாவாவான்; உன்னதமான பிரபுவின் அம்சமாவான். மனம் மாசடைந்தும், மனிதன் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறு சுதந்திரம் காரணமாகப் புரட்சி செய்கிறான். இந்த நிலையில் அவன் மனம் “நான் ஏன் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும்? நானே கடவுள்” என்று அவனுக்குச் சொல்லித் தருகிறது. இவ்வாறாக, தவறான கருத்தில் செயல்பட்டு அவன் வாழ்வு பாழ்படுகிறது. நாம் சாம்ராஜ்யங்கள் உட்பட எதையெதையோ வெற்றி காண முயற்சிக்கிறோம். ஆனால் நம் மனத்தை வெல்வதில் நாம் தோல்வியுற்றால், சாம்ராஜ்யங்களை வென்றாலும் தோற்றவர்களேயாவோம். சக்ரவர்த்திகள் ஆனாலும் நம்முள் நம் மாபெரும் எதிரி இருப்பான். அவன் நம் சொந்த மனம். ஜிதாத்மன: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: சீதோஷ்ணஸுகதுக்கேஷு ததா மானாபமானயோ: “மனதை வென்றவனுக்கு அவன் நிலைபெற்றுவிடுவதால், பரமாத்மா ஏற்கனவே அடையப்பட்டுவிடுகிறா...