மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த-மோக்ஷயோ: பந்தாய விஷயாஸங்கோ முக்த்யை நிர்விஷயம் மன: "மனிதனின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் மனமே காரணம். புலனின்பப் பொருள்களில் ஆழ்ந்துள்ள மனம் பந்தத்திற்கும், அவற்றிலிருந்து விலக்கப்பட்ட மனம் மோக்ஷத்திற்கும் காரணமாகின்றன." (அம்ருத-பிந்து உபநிஷத் 2) எனவே, கிருஷ்ண உணர்வில் எப்போதும் ஈடுபத்தப்பட்டுள்ள மனம் உன்னத மோக்ஷத்திற்குக் காரணமாகின்றது. மனதைப் படைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் நம் மனதை நிலைநிறுத்தினால் எப்பேர்ப்பட்ட மனநோயும் பறந்துவிடும். கிருஷ்ண பக்தர்களே சிறந்த மனநல மருத்துவர்கள். கிருஷ்ணரை நினைவுகொள்வதற்காகவே மனம் படைக்கப்பட்டுள்ளது என உணர்ந்தால், உடனடியாக மன அமைதி ஏற்படுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மறந்து மன உலகில் வாழ்பவர்கள் மனப்போராட்டத்தையே சந்திக்கின்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மகிழ்விக்க பக்தித் தொண்டில் மனம் ஈடுபடும்போதே மனநிறைவு ஒருவருக்கு இயற்கையாக ஏற்பட்டுவிடுகிறது. முந்தைய காலத்தில் உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தற்போதைய காலத்தில் நவீன கண்டுபிடிப்புகள்மீது மக்கள் உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்கின்றனர். தனது நண்பன் தொல...