ஸ ஸர்வ - தீ - வ்ருத்தி - அனுபூத - ஸர்வ ஆத்மா யதா ஸ்வப்ன ஜனேக்ஷிதைக : தம் ஸத்யம் ஆனந்த - நிதிம் பஜேத நான்யத்ர ஸஜ்ஜேத் யத ஆத்ம - பாத : மொழிபெயர்ப்பு ஒரு சாதாரண மனிதன் , அவன் காணும் கனவுகளில் ஆயிரக்கணக்கான தோற்றங்களை சிருஷ்டிப்பதைப் போலவே , பல்வேறு தோற்றங்களின் தம்மை விரித்துக் கொள்பவரான பரமபுருஷரின் மீது மட்டுமே ஒருவன் தன் மனதை பதியச் செய்ய வேண்டும் . ஒன்றேயான சர்வானந்த மெய்ப்பொருளின் மீது மட்டுமே தன் மனதை ஒருவன் பதிக்க வேண்டும் . இல்லையெனில் , ஒருவன் தவறாக வழிநடத்தப்பட்டு , தனது இழிவுக்கு தானே காரணமாகி விடுவான் . பொருளுரை இப்பதத்தில் , பக்தித் தொண்டாற்றும் முறை சிறந்த கோஸ்வாமியாகிய , ஸ்ரீல சுகதேவரால் சுட்டிக் காட்டப்படுகிறது . தன்னுணர்வுப் பாதையின் பல்வேறு கிளைகளில் நம் கவனத்தை நாம் திருப்புவதற்குப் பதிலாக , பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நம் வழிபாட்டிற்கும் , பக்திக்கும் , தன்னுணர்விற்கும் உரிய பரமபுருஷராக எண்ணி அவர் மீது நாம் கருத்தைச் செலுத்த வேண்டும் என்பதை நம் மனதில் பதியச் செய்ய சுகதேவர் முயற்சிக...