ஆபூர்யமாணம் அசல – ப்ரதிஷ்ட ம் ஸமுத் ரம் ஆப : ப்ரவிஷ ந்தி யத் வத் தத் வத் காமா யம் ப்ரவிஷ ந்தி ஸர்வே ஸ ஷா ந்திம் ஆப்னோதி ந காம – காமீ நதிகள் கடலில் வந்து கலந்தாலும் , கடல் மாறுவதில்லை . அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும் . அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல . பொருளுரை : பெருங்கடலில் எப்போதும் நீர் நிரம்பியிருந்தாலும் , மழைக்காலத்தில் குறிப்பாக மேன்மேலும் நீரால் நிரம்புகின்றது . ஆயினும் கடல் எப்போதும் போல நிலையாக உள்ளது ; கிளர்ச்சியடைவதோ , தனது கரையைத் தாண்டுவதோ இல்லை . கிருஷ்ண உணர்வில் நிலை பெற்றவனின் விஷயத்திலும் இஃது உண்மையாகிறது . ஜடவுடல் இருக்கும் வரை புலனுகர்ச்சிக்கான ஆசைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் . தனது பூரண நிலையால் , பக்தன் இத்தகு ஆசைகளால் பாதிக்கப்படுவ தில்லை . கிருஷ்ண பக்தனுக்கு எதுவும் தேவையில்லை ; ஏனெனில் , அவனது எல்லா பௌதிகத் தேவைகளையும் இறைவனே பூர்த்தி செய்கிறார் . எனவே , அவன் தன்னில் முழுமையுடைய கடலைப் போன்றவன் . கட...