Skip to main content

Posts

கீதா பண்டா

வெகு காலம் முன்பு, 'அர்ஜுன மிஸ்ரா' என்ற பெயருடைய பண்டா ஒருவர் பூரியில் வசித்து வந்தார். நாள் தோறும் அவர் பகவத் கீதையை முழுவதும் பாராயணம் செய்து வழக்கம். தன்னுடைய முழு நேரத்தையும் கீதை பாராயணம் செய்ய கழித்ததாலும், தன்னுடைய அசையா நம்பிக்கையாலும், உள்ளூர் மக்கள் அவரை 'கீதா பண்டா' என்றே அழைத்தார்கள். அவர் பகவான் ஜகந்நாதரின் பரம பக்தன், முழுமையாக சரணடைந்த ஆத்மா. அவர் எல்லாவற்றுக்கும் பகவான் ஶ்ரீ ஜகந்நாதரையே நம்பியிருந்தார். அவர் எது நடந்தாலும் அதை பகவான் ஶ்ரீ ஜகந்நாதருடைய விருப்பமாக ஏற்றுக் கொண்டார். அதனால் கீதா பண்டா  இன்ப துன்பங்களால் பாதிப்படையாமல் இருந்தார்.  அவர் மிகவும் ஏழ்மையானவர். யாசகம் கேட்டே தனது நித்ய வாழ்வை நடத்தி வந்தார். ஒரு சமயம் பூரியில் ஒரு வாரம் கடும் மழை பெய்தது. கீதா பண்டாவால் வெளியே போய் யாசகம் கேட்க முடியாமல் போயிற்று. அவரிடமிருந்த சொல்ப தானியங்களும் விரைவில் தீர்ந்துபோயின. அவரும் அவரது குடும்பத்தாரும் பட்டினிகிடக்க வேண்டியதாயிற்று. ஆயினும், கீதா பண்டா கலங்கவில்லை . அவர் சந்தோஷமாய் கீதை பாராயணம் செய்து காலம் கழித்தார். வெளியே போக முடியாமல்போனதுப் பற்றி...

துயரங்கள் யாருக்கு இல்லை

 
 

பகவானை தரிசிக்க எளிய வழி

 

ஜட உலகம் துன்பம் நிறைந்த இடம்

 

மன்னர் ருக்மாங்கதன்

  மன்னர் ருக்மாங்கதன் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 மன்னன் ரிதத்வஜாவுக்குப் பின் அயோத்தியை அரசாண்டவன் ருக்மாங்கதன். முற்பிறவியில் அவன் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். ஒரு அந்தணருடன் ஏற்பட்ட நட்பால் அவருடன் தீர்த்த யாத்திரை சென்று, ஏகாதசி விரதத்தை அனுசரித்ததால் கிடைக்கப் பெற்ற புண்ணியத்தால் மறுபிறவியில் பார்புகழும் மன்னனாய்ப் பிறந்தான். அவனது பட்டத்து ராணி சந்தியாவளி, இளவரசன் தர்மாங்கதன். அரசன் ஆழ்ந்த விஷ்ணு பக்தன். மன்னன் எவ்வழி, மக்களும் அவ்வழி என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைபிடிக்க வைத்தான். அதன்படி ஏகாதசி விரதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தான். விரதநாளுக்கு முன், யானை மீதேறி ராஜாங்கம் முழுதும் ஏகாதசி தினம் என்றைக்கு வருகிறது என முரசொலித்து அறிவிக்கச் செய்வான். அன்றைக்கு 8-லிருந்து 85 வயதானவர்கள் வரை அனைவரும் உள்ளத்தூய்மையுடன் விரதமேற்க வேண்டும் என ஆணையிடுவான்.  அரச கட்டளையால் மக்களும் உறுதியுடன் விரதம் மேற்கொண்டதால், யமதர்மராஜனுக்கு  வேலை பளு அறவே குறைந்து விட்டது. பாபம், புண்ணியங்களைக் கணக்கெடுக்கும்  சித்தி...

சபலா ஏகாதசி

 சபலா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த சபலா ஏகாதசி, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார். ஓ! கிருஷ்ணா, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். பரத வம்சத்தில் சிறந்தோனே. பாம்புகளின் ஆதிசேஷன் எவ்வாறு சிறந்ததோ, பறவைகளில் கருடன் எவ்வாறு சிறந்ததோ, யாகங்களில் எவ்வாறு அஸ்வமேத யாகம் சிறந்ததோ, நதிகளில் கங்கை எவ்வாறு சிறந்ததோ, அனைத்து தேவர்களிலும் விஷ்ணு எவ்வாறு சிறந்தவரோ, மற்றும் மனிதர்களில் அந்தணர்கள் எவ்வாறு சிறந்தவர்களோ, அவ்வாறே அனைத்து விரதங்களிலும் ஏகாதசி விரதம் மிகச் சிறந்தது. ஓ, மன்னர்களில் சிறந்தோனே. யாரொருவர் ஏகாதசியை அனுஷ்டிக்கிறாரோ, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். ஐந்தாயிரம் ஆண்டுகள் தவம் மேற்கொள்வதால் அடையும் புண்ணிய பலனை ஒருவர் ஏகாதசி விரதத்தை அ...