பலி மகாராஜா வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 மகாராஜா பலி பிரகலாத மஹாராஜரின் பேரன் ஆவார். இவர் பகவானுக்கு செய்யும் பக்தி சேவையில் மற்றொரு அங்கீகாரம் பெற்ற பக்தராவார். மிகவும் சக்தி வாய்ந்த அரசனான இவர் தேவர்களின் அரசனான இந்திரனுடன் போரிட்டு மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தினார். அவர் யாகம் ஒன்றை நடத்தி பிராமணர்களுக்கு தானம் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு நன்மை செய்யும் பொருட்டு பகவான் விஷ்ணு ஒரு குள்ள பிராமணனின் வடிவில் அதிதிக்கு மகனாகப் பிறந்து மஹாராஜா பலி நடத்தும் யாக சாலைக்கு ஒரு யாசகம் பெரும் பிராமணனைப் போல் வந்தார். அவர் பலி மகாராஜானிடம் தன்னுடைய பாதத்தில் மூன்றடி நிலம் அளந்து தானமாகக் தருமாறு கேட்டார். மகராஜா பலியின் ஆன்மீக குருவும் அவரது அரசவையில் தலைமை பிராமணராகவும் இருந்த சுக்ராச்சாரியார், குள்ள பிராமணனின் வடிவில் வந்திருப்பவர் பகவான் கிருஷ்ணர் என்பதைக் அவரால் காண முடிந்தது. இதனால் அவர் பலியிடம் இந்த சிறுவனின் கோரிக்கைகளை ஏற்காதே என்று அறிவுரை க...