ஶ்ரீல பிரபுபாதர் அருளிய கதைகள் ஒரு பக்தர் தேவையில்லாமல் வைஷ்ணவ உடைகளையோ, துளசி மணிமாலை போன்றவற்றை அணிவதை விட்டுவிடக் கூடாது. மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் நிறைய இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வேலை செய்தனர். அதிலும் பெரும்பாலானோர் வைஷ்ணவர்களாவர். அங்கு வைஷ்ணவர்களுக்கு நெற்றியில் திலகம் அணியவும், துளசி மாலை மற்றும் பிற வைஷ்ணவ அடையாள சாதனங்களை உபயோகிக்க சுதந்திரம் இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு தொழிற்சாலை ஒரு புதிய நிர்வாகத்தின் கைக்கு மாறியது. அதன் உரிமையாளர்கொரு முகமதியர் (முஸ்லீம்) ஆவார். அவர் அங்கு வேலை பார்ப்பவர்களிடம், வைஷ்ணவ திலகம் அணிந்து கொண்டு வேலைக்கு வருவதற்கு அனுமதி இல்லை என்றார். பெரும்பான ஊழியர்கள் அதற்குக் கீழ்படிந்து நிர்வாகி அறிவித்த தேதியிலிருந்து திலகம் அணியாமல் வேலைக்கு வந்தனர். ஆனால் ஒரே ஒரு ஊழியர் மட்டும் ஆனது ஆகட்டும் அனைத்தையும் பகவான் கிருஷ்ணர் பார்த்துக் கொள்வார் என்று அவரையே முழுமையாகச் சரணடைந்து தைரியமாக அழகான திலகத்தை நெற்றியில் தரித்துக் கொண்டு வேலைக்கு வந்தார். மறுநாள் காலையில் அனைத்து ...