நரசிம்ம அவதாரம் ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பாகம் 1 அசுரராஜன், இரண்யகசிபு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பரமபுருஷர் வராக - மூர்த்தியாகத் தோன்றி இரண்யகசிபுவின் தமயனான இரண்யாக்ஷனைக் கொன்றபொழுது, இரண்யகசிபு மிகவும் வருத்தமடைந்தான். பரமபுருஷர் அவரது பக்தர்களிடம் பாரபட்சம் உடையவர் என்று கோபத்துடன் குற்றம் சாட்டிய அவன் தன் சகோதரனைக் கொல்வதற்காக வராக - மூர்த்தியாகத் தோன்றிய பகவானை ஏளனம் செய்தான். அவன் எல்லா அசுரர்களையும், இராட்சஸர்களையும் கிளர்தெழச் செய்து, அமைதிமிக்க முனிவர்களின் மற்றும் பிற மண்ணுலக வாசிகளின் வேதக் கிரிகைகளுக்கு இடையூறு விளைவித்தான். யாகங்கள் நின்றுவிட்ட காரணத்தால் தேவர்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் மண்ணுலகில் சஞ்சரிக்கத் துவங்கினார். தன் சகோதரனின் ஈமக்கிரியைகளை முடித்தபின் இரண்யகசிபு தன் மருமகன்களிடம் வாழ்வின் உண்மையைப் பற்றி சாஸ்திரங்களிலிருந்து எடுத்துக்கூறத் தொடங்கினான். அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பின்வருமாறு அவன் பேசினான். “அன்புள்ள மருமகன்களே வீரர்களுக்குப் பகைவர்களின் முன்னிலையில் மடிவது புகழ் சேர்ப்பதாகும். வெவ்வேறு கருமங்களுக்கேற்ப...