Skip to main content

Posts

யமுனைநதியின் பூலோக பயணம்

 யமுனைநதியின் பூலோக பயணம் ( ஆதாரம் - கர்க சம்ஹிதை ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கோலோகத்திலிருக்கும் பகவான் கிருஷ்ணரின் கட்டளையின் பேரில், யமுனா தேவி, பகவானை தரிசித்து விட்டு பூமிக்கு புறப்பட தயாரானார். அப்போது ஆன்மீகமான வ்ரஜா நதியும் கங்கை நதியும் யமுனைக்குள் புகுந்து கொண்டன.  இந்த காரணத்தால் தான், யமுனை நதி சிறந்ததாகவும், பகவான் கிருஷ்ணரின் முதல் ராணியாகவும் கருதப்படுகிறது.  வ்ரஜா நதியின் ஓட்டத்தை உடைத்துக்கொண்டு, மிகுந்த சக்தியுடன் யமுனை நதி கோலோகத்தை கடந்தது. பல அண்டங்களை தாண்டி, கங்கை நதியின் நீரோட்டத்தையும் உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்து. பகவான் வாமன தேவரின் பாத விரலால், அண்டத்தின் மேல் ஏற்பட்டிருந்த ஓட்டையின் வழியாக நுழைந்து, துருவ  மஹாராஜருடைய உலகத்தின் (துருவ லோகத்தில் ) நுழைந்தது. அதன் பின்னர் பிரம்மலோகம் சென்று, அங்கிருந்து பல்வேறு லோகங்களுக்கு சென்று, ஒரு வழியாக சுமேரு பர்வதத்தை அடைந்தது. யமுனையின் சக்தி, சுமேரு பர்வதத்தின் பாறைகளை உடைத்து தள்ளியது. அந்த இடத்தில் யமுனை , கங்கை நதியை பிரிந்தது . கங்கை நதி அங்கிருந்து ஹிமாவதி பர்வதத்திற்கு சென்றது. அதே சமயம், யமு...

ஸ்ரீல பக்திவினோத தாகூர்

 ஸ்ரீல பக்திவினோத தாகூர் 💐💐💐💐💐💐💐💐💐 பக்திவினோத தாகூர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது. சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட வைஷ்ணவ சம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து இருந்தது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையின் காரணத்தினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ சம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது. வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள் மற்றும் பாகவதத்தில் புதைந்திருந்த ஆழமான தத்துவத்தினை பக்திவினோத தாகூர் தனது உயர்ந்த இறையன்பினால் வெளிக்கொணர்ந்தார். அவர் தனது தெய்வீக ...

நாமாசாரியர் ஸ்ரீல ஹரிதாஸ தாகூர்

 நாமாசாரியர் ஸ்ரீல ஹரிதாஸ தாகூர் வழங்கியவர்: திருமதி. கீதா கோவிந்த தாஸி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தினம் தோறும் மூன்று லட்சம் நாமத்தை உச்சாடனம் செய்த நாமாசாரியர் ஸ்ரீல ஹரிதாஸ தாகூரின் வாழ்க்கை வரலாறு 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 நாமாசாரியர் என்னும் சமஸ்கிருத சொல், 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 நாம, ஆசாரியர் என்னும் இரு சொற்களின் கூட்டுச் சொல்லாகும். நாம என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தைக் குறிக்கும். ஆசாரியர் என்றால் தன்னுடைய நன்னடத்தையின் மூலம் மற்றவர்களுக்கு போதிப்பவர் என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தை தானும் உச்சரித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவரை நாமாசாரியர் என்று அழைக்கலாம். பகவான் சைதன்யர் தனது முக்கியமான சீடர்களில் ஒருவரான ஹரிதாஸ தாகூருக்கு இப்பட்டத்தைச் சூட்டி கௌரவித்தார். ஹரிதாஸ தாகூர் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தற்போதைய சத்-கிரா மாவட்டத்திலுள்ள (முற்காலத்தில் குல்னா பகுதியின் கிளையாக இருந்த) புடான் என்னும் கிராமத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். சைதன்ய மஹாபிரபுவைவிட 35 வருடங்கள் மூத்தவரான இவர், வங்காளதேசத்தில் தனது கிராமத்தில் சிலகாலம் வசித்த பின்னர், சாந்தி பூருக்கு அ...

கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம்

  கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம்  வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்  🍁🍁🍁🍁🍁🍁🍁 கிருஷ்ணர் ஏன் கோபியர்களுடன் நடனமாடினார்? அவர் ஏன் எப்போதும் கோபியர்களுடன் காட்சியளிக்கிறார்? போன்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் நேற்று, இன்று, நாளை என்று என்றென்றும் எழும் கேள்விகள். சாஸ்திரங்களும் பல்வேறு ஆச்சாரியர்களும் இதற்கு வழங்கியுள்ள பதில்கள் புத்திக்கூர்மையுள்ள அனைவரையும் திருப்திப்படுத்துபவை.    கிருஷ்ண லீலைகள் சாதாரணமானவை அல்ல  🍁🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுளின் செயல்களில் எந்தவொரு குற்றமும் இருக்க முடியாது, அவ்வாறு ஏதேனும் குற்றமிருப்பின் அவர் முழுமுதற் கடவுளாக இருக்க முடியாது. கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவரது செயல்கள் அனைத்தும் தெய்வீகமானவை என்றும் சாஸ்திரங்களும் ஆச்சாரியர்களும் தெளிவுபடுத்தி உள்ளனர். கிருஷ்ணரது பிறப்பும் செயல்களும் தெய்வீகமானவை என்பதை தத்துவபூர்வமாக உணர்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று பகவத் கீதை (4.9) உறுதிப்படுத்துகிறது.  இருப்பினும், கிருஷ்ணரது செயல்களை தெய்வீகமானதாக ஏற்றுக்கொள்ளும் பக்தர்களில்கூட பெரும்பாலானோர் அவற்றை தத்துவபூர்வம...