Skip to main content

Posts

பாகவத கதைகளும் பொழுதுபோக்கும்

  வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியத்துவம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது லீலைகளை நிறைவேற்றி விட்டு, கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்பிச் சென்றவுடன், ஸ்ரீமத் பாகவதம் அவரது இலக்கிய அவதாரமாக தோன்றியுள்ளது. இந்த பாகவத சூரியன் கலி யுகத்தின் இருளில் தவிக்கும் மக்களுக்கு ஒளி கொடுப்பதற்காகவே உதயமாகியுள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.3.43) வேத ஞானம் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகிய இந்த பாகவதம், ஸ்ரீல வியாஸதேவரால் அவரது முதிர்ச்சி பெற்ற பக்குவநிலையில் வேதாந்த சூத்திரத்தின் ஒரு விளக்கவுரையாக எழுதப்பட்டது. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3) எனவே, கிம் வா பரைர், பாகவதத்தைப் படிப்பவருக்கு வேறு எந்த நூலும் அவசியமில்லை என்று சொல்லும் அளவிற்கு இது தலைசிறந்த சாஸ்திரமாக உள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2) இதனால்தான், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீமத் பாகவதம் பிரமாணம் அமலம், “ஸ்ரீமத் பாகவதமே பரம்பொருளை நிலைநாட்டுவதற்கான சாஸ்திரங்களில் களங்கமற்ற உயர்ந்த சாஸ்திரம்,” என்று குறிப்பிட்டுள்ளார். பாகவதத்தைச் செவியுருதல் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீமத் பாகவதம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது...

ஸ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை

  இந்திரத்யும்ன மஹாராஜ கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை  🔆🔆🔆🔆🔆🔆 ஜேஷ்ட மாதத்தின் (ஆனி மாதம்) பௌர்ணமி தினத்தில், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்  பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பகவான் ஜெகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்திரா தேவி ஆகியோரை, சுதர்ஷனத்துடன் கர்பகிரகத்திலிருந்து வெளியே கொண்டுவந்து ஒரு மேடையில் அமர்த்துவர். பின்னர் இவர்கள் தங்க கலசங்களின் புனிதநீரை கொண்டு விமர்சையாக நீராட்டுவர்.  நீராட்டு முடிந்த பின்னர், பகவான் ஜெகந்நாதர் கணேசரின் ரூபத்தில் காட்சியளிப்பார். இந்த நீராட்டு விழாவை தேவர்களும் விமர்சையாக கொண்டாடுவர். பிரம்மாவின் தலைமையில், அனைத்து தேவர்களும் பாரிஜாத மலரின் சாரை கொண்ட நறுமண கங்கை நீரை தங்களது சிரசின் மேல் சுமந்து வந்து பகவானை கோலாகலமாக நீராட்டுவர். பின்னர் தங்களது பிரார்த்தனைகளை சமர்ப்பணம் செய்வர்.  அனைத்து தேவர்களும் இந்த விழாவை சவுகரியமாக காணவேண்டும் என்பதற்காக இந்திரத்யும்ன மஹாராஜர் பெரிய பந்தலை நிர்மாணம் செய்தார். மேலும் பகவான் அமர்த்தப்ப...

அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை)

  அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை)  பகவான் ஜெகந்நாதரின் அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை) எப்பொழுது நடைபெறும் என்று ஸார்வபௌம பட்டாட்சியரிடம் மன்னர் பிரதாபருத்ரர் வினவியபோது, அதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன என்று பட்டாச்சாரியர் பதிலளித்தார்.  மன்னருக்கு இவ்வாறு ஊக்கமளித்துவிட்டு,  ஸரர்வபௌம பட்டாச்சாரியர் தமது இல்லத்திற்குத் திரும்பினார். பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை நாளன்று,  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு  இதயத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார்.  பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரையைக் கண்டு , ஶ்ரீ சைதன்ய மகாபிரபு பெரிதும் மகிழ்ச்சியுற்றார். ஆனால் அந்த விழாவிற்குப் பிறகு பகவான் ஜெகன்நாதர் ஓய்வெடுத்த காலத்தில், அவரை காண இயலாததால் சைதன்ய மகாபிரபு மிகவும் வருத்தமுற்றார் ரத யாத்திரை திருவிழாவிற்குப் 15 நாட்கள் முன்பாக நடைபெறும் ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்நான யாத்திரை நிகழ்ச்சிக்குப் பின்னர்,  ஜெகன்நாத விக்கிரகத்தின் திருமேனியில் மீண்டும் வண்ணம் தீட்டப்படுகிறது. இது முடிவுறுவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகின்றது.  இந்த காலமானது "அனவஸர " என்று சொல்லப்படுகிறது. ப...

ஸ்ரீ ரகுநாததாஸ கோஸ்வாமி

ஸ்ரீ ரகுநாததாஸ கோஸ்வாமி வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆 மேற்கு வங்காளத்தில் ஸப்தக்ராமம் என்ற இடத்தில் ஹிரண்ய மஜீம்தார். . கோவர்தன  மஜீம்தார். என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள். ராஜ வம்சத்தை சேர்ந்த அவர்களின் குலத்திற்கு கோவர்தன மஜீம்தாரின் மகனான ரகுநாத தாஸரே ஒரே வாரிசு ஆவார். அவர் ஶ்ரீல பலராம ஆசார்யரிடம் கல்வி கற்று  சமஸ்கிருதம். ஸாஹித்யம். சாஸ்த்ரம் இவற்றில் சிறந்து விளங்கினார். அவருக்கு இளமையில் இருந்தே லௌகீக விஷயங்களில் நாட்டம் இல்லை. ஒருமுறை ஹரிதாஸ் தாகூர் சாந்திப்பூர் வந்தார். பலராம ஆசார்யர் அவரை வரவேற்று, அவருக்கு ஒரு குடில் அமைத்து உபசரித்து வந்தார். ரகுநாத தாஸ், ஹரிதாஸரின் பஜன நிஷ்டை, திவ்ய பாவாவேசம் இவற்றால் கவரப்பட்டார். பரம பாகவதரான ஹரி தாஸரின் திவ்யதரிசனம், அவரது கருணை, மற்றும்  ஆசீர்வாதம் இவற்றின் மூலம் ரகுநாதரின் ஸாதனா பக்தி என்னும் கதவு திறந்தது. அதன் மூலம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணை கிடைத்தது. ரகுநாதரின் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் உரையாடலில் பேசப்படும் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின்  ரூப மாதுர்யம், ல...

ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதர்

  ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதருடைய தாய்  தந்தையின் பெயர் ஸ்ரீ கமல தேவி, ஸ்ரீ காமேஸரி மிஸ்ரர், அவருடைய ஐந்து சகோதர்கள்: தாமோதரர், ஜகன்னாதர், சூர்யதாஸர், கிருஷ்ணதாஸர், நரசிம்ம சைதன்யர்.சூரியதாஸர் தனது புதல்விகளாகிய வசுதா மற்றும் ஜானவா தேவி இருவரையுமே பகவான் ஶ்ரீ நித்யானந்தருக்கு மணமுடித்தார். விருந்தாவன லீலையில் சுபலா சகாவாக இருந்த கெளரிதாஸர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடைய முக்கியமான பன்னிரெண்டு, அதாவது துவாதச கோபால நண்பர்களுள் ஒருவராவார்.  ஒருமுறை பகவான் ஶ்ரீ சைதன்யரும், பகவான் நித்யானந்தரும் கெளரிதாஸரை சந்திக்க சாந்திபுரிலிருந்து தாங்களே படகில் துடுப்புபோட்டு கங்கையை கடந்து, அம்பிகா கல்னாவிற்கு வந்தனர். தனது கையிலிருந்த துடுப்பை கெளரிதாஸரிடம் தந்த பகவான் ஶ்ரீ சைதன்யர், இந்த துடுப்பின் மூலமாக மக்களை பெளதிக கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்வீராக” என்று ஒப்படைத்தார். இன்றும்  கெளரிதாஸரின் இல்லத்தில் உள்ள கோவிலில் அந்த துடுப்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மற்றொரு முறை சைதன்யரும் நித்யானந்தரும் “ஹரி ...

பானிஹாட்டி சிடா-தஹி திருவிழா

  பானிஹாட்டி  சிடா-தஹி திருவிழா ( ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை, அத்யாயம் 6 / மொழிபெயர்ப்பு ) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள். மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த அவர், பகவத் பக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு, ஸ்ரீ சைதன்யரிடம் சரணடைய முனைந்தார். பல முறை வீட்டை விட்டு ஓடியபோதிலும், அவரது தந்தை தனது ஆட்களைக் கொண்டு அவரை மீண்டும்மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். அச்சூழ்நிலையில், பானிஹாட்டி எனப்படும் இடத்தில், ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கட்டளைப்படி, ரகுநாதர் தயிரையும் அவலையும் கொண்டு ஒரு வித்தியாசமான விருந்திற்கு ஏற்பாடு செய்தார். ரகுநாதரின் மீது திருப்தியுற்று நித்யானந்தர் கருணையைப் பொழிய, அக்கருணையினால் குறுகிய காலத்திலேயே ரகுநாதரால் ஸ்ரீ சைதன்யருடன் இணைய முடிந்தது. ரகுநாதர் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கருணையினால் ஸ்ரீ சைதன்யரை அடைந்தார் என்பதை நினைவுகொள் வதற்காகவும் நாமும் அக்கருணையின் சிறு துளியைப் பருகுவதற்காக...

ஶ்ரீநிவாச ஆச்சாரியர்

  ஶ்ரீநிவாச ஆச்சாரியர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 வாஞ்சா கல்பதருப யஷ் ச க்ருபா ஸிந்துப்ய  ஏவ ச    பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ  நமோ நம: நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லோரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவகர்களுமான பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.  கதாதர பட்டாச்சாரியர் ஸ்ரீனிவாச ஆச்சாரியாரின் தந்தை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆  கதாதர பட்டாச்சாரியாரரும் அவரது மனைவி லட்சுமி ப்ரியாவும் "நிமாய் பண்டிட்"  - பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வின் மிகச் சிறந்த பக்தர்கள் ஆவர்.  ஒருமுறை கதாதர பட்டாச்சாரியார் பகவான் சைதன்யரை தரிசனம் செய்வதற்காக அவரது கிராமத்தை விட்டு மாயாப்பூருக்குச் செல்ல முடிவு செய்தார். அவ்வாறு செல்கையில் தனது நெருங்கிய நண்பர் கேஷவ பாரதி  வசிக்கும் கட்வா என்ற சிறிய கிராமத்திற்கு சென்று பின் தன் பயணத்தை தொடரலாம் என்று திட்டமிட்டிருந்தார்.  அப்போது அவர் செல்லும் அதே வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் ச...