Skip to main content

Posts

தனக்கு உதவிக் கொள்பவனுக்குக் கடவுள் உதவுகிறார்

 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  ஸ்ரீ-பகவான் உவாச மய்யா-வேஷ்ய மனோ யே மாம் நித்ய–யுக்தா உபாஸதே ஷ்ரத்தயா பரயோபேதாஸ் தே மே யுக்ததமா மதா: மொழிபெயர்ப்பு ******************** புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: தனது தனிப்பட்ட உருவின் மீது மனதை நிலைநிறுத்தி, திவ்யமான நம்பிக்கையுடன் எப்போதும் எனது வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் பக்குவமானவர்களாக என்னால் கருதப்படுகிறார்கள். பொருளுரை ***************** எவனொருவன் தனது தனிப்பட்ட உருவத்தின் மீது மனதை நிலைநிறுத்தி, பக்தியுடனும் நம்பிக்கையுடனும் தன்னை வழிபடுகின்றானோ, அவனே யோகத்தில் மிகவும் சிறந்தவனாகக் கருதப்படவேண்டும் என்று கிருஷ்ணர் மிகத் தெளிவாக அர்ஜுனனின் கேள்விக்கு இங்கு விடையளிக்கின்றார். இத்தகு கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கு ஜடச்செயல்கள் எதுவும் கிடையாது; ஏனெனில், அனைத்தும் கிருஷ்ணருக்காகச் செய்யப்படுகின்றன. தூய பக்தன் சதா சர்வ காலமும் செயலில் ஈடுபட்டுள்ளான்—சில நேரங்களில் அவன் ஜபம் செய்கின்றான், சில நேரங்களில் கிருஷ்ணரைப் பற்றிய நூல்களைப் படிக்கவோ கேட்கவோ செய்கின்றான், சில நேரங்களில் பிரசாதம் சமைக்கின்றான், சில நேரங்களில் கிருஷ்ணருக்காக ஏதேனும் வாங்குவதற்க...

பாகவத கதைகளும் பொழுதுபோக்கும்

  வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியத்துவம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது லீலைகளை நிறைவேற்றி விட்டு, கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்பிச் சென்றவுடன், ஸ்ரீமத் பாகவதம் அவரது இலக்கிய அவதாரமாக தோன்றியுள்ளது. இந்த பாகவத சூரியன் கலி யுகத்தின் இருளில் தவிக்கும் மக்களுக்கு ஒளி கொடுப்பதற்காகவே உதயமாகியுள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.3.43) வேத ஞானம் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகிய இந்த பாகவதம், ஸ்ரீல வியாஸதேவரால் அவரது முதிர்ச்சி பெற்ற பக்குவநிலையில் வேதாந்த சூத்திரத்தின் ஒரு விளக்கவுரையாக எழுதப்பட்டது. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3) எனவே, கிம் வா பரைர், பாகவதத்தைப் படிப்பவருக்கு வேறு எந்த நூலும் அவசியமில்லை என்று சொல்லும் அளவிற்கு இது தலைசிறந்த சாஸ்திரமாக உள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2) இதனால்தான், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீமத் பாகவதம் பிரமாணம் அமலம், “ஸ்ரீமத் பாகவதமே பரம்பொருளை நிலைநாட்டுவதற்கான சாஸ்திரங்களில் களங்கமற்ற உயர்ந்த சாஸ்திரம்,” என்று குறிப்பிட்டுள்ளார். பாகவதத்தைச் செவியுருதல் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீமத் பாகவதம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது...

ஸ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை

  இந்திரத்யும்ன மஹாராஜ கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை  🔆🔆🔆🔆🔆🔆 ஜேஷ்ட மாதத்தின் (ஆனி மாதம்) பௌர்ணமி தினத்தில், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்  பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பகவான் ஜெகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்திரா தேவி ஆகியோரை, சுதர்ஷனத்துடன் கர்பகிரகத்திலிருந்து வெளியே கொண்டுவந்து ஒரு மேடையில் அமர்த்துவர். பின்னர் இவர்கள் தங்க கலசங்களின் புனிதநீரை கொண்டு விமர்சையாக நீராட்டுவர்.  நீராட்டு முடிந்த பின்னர், பகவான் ஜெகந்நாதர் கணேசரின் ரூபத்தில் காட்சியளிப்பார். இந்த நீராட்டு விழாவை தேவர்களும் விமர்சையாக கொண்டாடுவர். பிரம்மாவின் தலைமையில், அனைத்து தேவர்களும் பாரிஜாத மலரின் சாரை கொண்ட நறுமண கங்கை நீரை தங்களது சிரசின் மேல் சுமந்து வந்து பகவானை கோலாகலமாக நீராட்டுவர். பின்னர் தங்களது பிரார்த்தனைகளை சமர்ப்பணம் செய்வர்.  அனைத்து தேவர்களும் இந்த விழாவை சவுகரியமாக காணவேண்டும் என்பதற்காக இந்திரத்யும்ன மஹாராஜர் பெரிய பந்தலை நிர்மாணம் செய்தார். மேலும் பகவான் அமர்த்தப்ப...

அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை)

  அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை)  பகவான் ஜெகந்நாதரின் அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை) எப்பொழுது நடைபெறும் என்று ஸார்வபௌம பட்டாட்சியரிடம் மன்னர் பிரதாபருத்ரர் வினவியபோது, அதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன என்று பட்டாச்சாரியர் பதிலளித்தார்.  மன்னருக்கு இவ்வாறு ஊக்கமளித்துவிட்டு,  ஸரர்வபௌம பட்டாச்சாரியர் தமது இல்லத்திற்குத் திரும்பினார். பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை நாளன்று,  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு  இதயத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார்.  பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரையைக் கண்டு , ஶ்ரீ சைதன்ய மகாபிரபு பெரிதும் மகிழ்ச்சியுற்றார். ஆனால் அந்த விழாவிற்குப் பிறகு பகவான் ஜெகன்நாதர் ஓய்வெடுத்த காலத்தில், அவரை காண இயலாததால் சைதன்ய மகாபிரபு மிகவும் வருத்தமுற்றார் ரத யாத்திரை திருவிழாவிற்குப் 15 நாட்கள் முன்பாக நடைபெறும் ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்நான யாத்திரை நிகழ்ச்சிக்குப் பின்னர்,  ஜெகன்நாத விக்கிரகத்தின் திருமேனியில் மீண்டும் வண்ணம் தீட்டப்படுகிறது. இது முடிவுறுவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகின்றது.  இந்த காலமானது "அனவஸர " என்று சொல்லப்படுகிறது. ப...

ஸ்ரீ ரகுநாததாஸ கோஸ்வாமி

ஸ்ரீ ரகுநாததாஸ கோஸ்வாமி வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆 மேற்கு வங்காளத்தில் ஸப்தக்ராமம் என்ற இடத்தில் ஹிரண்ய மஜீம்தார். . கோவர்தன  மஜீம்தார். என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள். ராஜ வம்சத்தை சேர்ந்த அவர்களின் குலத்திற்கு கோவர்தன மஜீம்தாரின் மகனான ரகுநாத தாஸரே ஒரே வாரிசு ஆவார். அவர் ஶ்ரீல பலராம ஆசார்யரிடம் கல்வி கற்று  சமஸ்கிருதம். ஸாஹித்யம். சாஸ்த்ரம் இவற்றில் சிறந்து விளங்கினார். அவருக்கு இளமையில் இருந்தே லௌகீக விஷயங்களில் நாட்டம் இல்லை. ஒருமுறை ஹரிதாஸ் தாகூர் சாந்திப்பூர் வந்தார். பலராம ஆசார்யர் அவரை வரவேற்று, அவருக்கு ஒரு குடில் அமைத்து உபசரித்து வந்தார். ரகுநாத தாஸ், ஹரிதாஸரின் பஜன நிஷ்டை, திவ்ய பாவாவேசம் இவற்றால் கவரப்பட்டார். பரம பாகவதரான ஹரி தாஸரின் திவ்யதரிசனம், அவரது கருணை, மற்றும்  ஆசீர்வாதம் இவற்றின் மூலம் ரகுநாதரின் ஸாதனா பக்தி என்னும் கதவு திறந்தது. அதன் மூலம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணை கிடைத்தது. ரகுநாதரின் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் உரையாடலில் பேசப்படும் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின்  ரூப மாதுர்யம், ல...

ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதர்

  ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதருடைய தாய்  தந்தையின் பெயர் ஸ்ரீ கமல தேவி, ஸ்ரீ காமேஸரி மிஸ்ரர், அவருடைய ஐந்து சகோதர்கள்: தாமோதரர், ஜகன்னாதர், சூர்யதாஸர், கிருஷ்ணதாஸர், நரசிம்ம சைதன்யர்.சூரியதாஸர் தனது புதல்விகளாகிய வசுதா மற்றும் ஜானவா தேவி இருவரையுமே பகவான் ஶ்ரீ நித்யானந்தருக்கு மணமுடித்தார். விருந்தாவன லீலையில் சுபலா சகாவாக இருந்த கெளரிதாஸர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடைய முக்கியமான பன்னிரெண்டு, அதாவது துவாதச கோபால நண்பர்களுள் ஒருவராவார்.  ஒருமுறை பகவான் ஶ்ரீ சைதன்யரும், பகவான் நித்யானந்தரும் கெளரிதாஸரை சந்திக்க சாந்திபுரிலிருந்து தாங்களே படகில் துடுப்புபோட்டு கங்கையை கடந்து, அம்பிகா கல்னாவிற்கு வந்தனர். தனது கையிலிருந்த துடுப்பை கெளரிதாஸரிடம் தந்த பகவான் ஶ்ரீ சைதன்யர், இந்த துடுப்பின் மூலமாக மக்களை பெளதிக கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்வீராக” என்று ஒப்படைத்தார். இன்றும்  கெளரிதாஸரின் இல்லத்தில் உள்ள கோவிலில் அந்த துடுப்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மற்றொரு முறை சைதன்யரும் நித்யானந்தரும் “ஹரி ...