Skip to main content

Posts

பார்ஸ்வ ஏகாதசி

பார்ஸ்வ ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏகாதசியை பரிவர்த்தினி (அல்லது) வாமன ஏகாதசி என்றும் கூறுவர். மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். புரட்டாசி மாத வளர்பிறையில் (ஆகஸ்ட்/செப்டம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும். இதனால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? என்பனவற்றை தயவு செய்து எனக்கு விளக்கமாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ மன்னா, புரட்டாசி, மாத வளர்பிறையில் (ஆகஸ்ட்செப்டம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் பார்ஸ்வ ஏகாதசி, இந்த ஏகாதசி மிகவும் மங்களகரமானது. இது ஒருவரின் எல்லா பாவங்களையும் அழித்து முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பதாலேயே ஒருவரின் பாவ விளைவுகள் அனைத்தும் அழிக்கப்படும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் அடையும் பலனை ஒருவர் வாஜ்பேய யாகத்தை மேற்கொண்டாலும் அடைய முடியாது. இந்த ஏகாதசியை ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறுவர் இந்த ஏகாதசியன்று பக்தியுடன் பகவான் வாமன தேவரை வழிபடு...

ஶ்ரீ கிருஷ்ணர் , ஸ்ரீமதி ராதாராணியின் உயர்ந்த நிலையை நிரூபித்தல்.

  ஶ்ரீ கிருஷ்ணர் , ஸ்ரீமதி ராதாராணியின் உயர்ந்த நிலையை நிரூபித்தல். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 இந்த லீலையானது ஸ்ரீமதி ராதாராணியின் பெளகண்ட பருவத்தின் முடிவில் நடைபெற்றதாகும். ஒருமுறை ராதா ராணியின் அன்பால் பிடிக்கப்பட்ட கிருஷ்ணர் அவரிடம், " அனைத்து வழிபாடுகளின் சாரம் உன்னை வணங்குவதுதான்." யாரேனும் உன்னை வழிபடாமல் என்னை மட்டும் வழிபட்டால் அவர் பயனேதும் அடையப் போவது இல்லை. நீ என்னுடைய "மஹாபாவ மயி" - எனது ஆனந்தத்தின் ஆற்றல் நீ. என்னை சந்தோசப்படுத்துவதன் மூலம் நீ சந்தோசமடைகின்றாய். எனது ஆனந்தமே உனது ஆனந்தம். உன் சொந்த இன்பத்திற்கான ஆசையை முற்றிலும் விலக்கி விட்டாய். எனது சங்கம் மற்றும் எனது சேவையில் நிலைத்து இருப்பதை தவிர நீ எதையும் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. யார் உனது இத்தகைய வழிபாட்டு முறையை பின்பற்றுகிறாரோ, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். நான் அவர்களை யோகிகள் மற்றும் தபஸ்விகளை விட மேலானவர்களாக பாவிகின்றேன். உன்னுடைய கருணா கடாக்க்ஷம் இல்லாமல் யாரும் என்னை அடைய முடியாது. தூய பக்தி சேவையினால் மட்டுமே என்னை அடைய முடியும். உன்னுடைய செயல்கள் அனைத்தும் தூய பக்தி...

ராதாஷ்டமி( ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த சுபதினம்)

  ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமையமான அந்தரங்க சக்தியும், மிக மிகச்சிறந்த தூய பக்தையுமாவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லட்சுமி தேவியின் மூலமாவார். ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த விதம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார். அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக பார்வதி தேவி பிறந்தார். பிறகு பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தேவாதிதேவர்களும், முனிவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் விந்தியமலையும் வந்திருந்தது. கோலாகலமாக நடந்த விழாவை கண்ணுற்ற விந்தியமலை மிகவும் ஆச்சர்யப்பட்டது. அத்துடன் மிகவும் போற்றுதற்குரியசிவபெருமானே, இமயமலையின் மருமகனாக வந்திருக்கிறார் என்றும் வியந்தது. உடனேதனக்கும் அது போல் சிறந்த ஒரு மகாபுருஷர், மருமகனாக வர வேண்டும் என்று விந்தியமலை ஆசைப்பட்டது. இந்த ஆசை நிறைவே...

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை