Skip to main content

Posts

விக்ரஹ வழிபாடு

  மரம் கல் அல்லது வேறு பொருட்களிலிருந்து பகவானின் ரூபம் செதுக்கப்படும் போது அதில் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் வீற்றுள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் யதார்த்தமாக யோசித்தால் கூட எல்லா பௌதிக மூலக்கூறுகளும் பகவானுடைய சக்தியின் விரிவுகளே என்பதை புரிந்துகொள்ள முடியும் பரம புருஷ பகவானின் சக்தியானது அவரது தனிப்பட்ட உடலிலிருந்து வேறுபட்டதல்ல என்பதால் பகவான் அவரது சக்தியில் எப்பொழுதும் விற்றுள்ளார் தமது பக்தனின் தீவிரமான விருப்பத்தின் அடிப்படையில் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார் பகவான் மிக உயர்ந்த சக்திகளை கொண்டுள்ளார் என்பதால் அவர் தம்மை தமது சக்திகளின் மூலமாக வெளிப்படுத்த இயலும் என்பது நியாயமானதாகும். விக்கிரக வழிபாடு அல்லது சாளக்ராம வழிபாடு என்பது சிலையை வழிபடுவது அன்று. தூய பக்தனின் இல்லத்திலுள்ள பகவானின் விக்ரஹத்தினால் அந்த தெய்வீகமான மூல புருஷர் எவ்வாறு செயல்படுவாரோ அதே போன்று செயல்பட முடியும். (பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்/ ஆதி லீலை 14.9) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ...

ஸ்ரீ அபராத சோதணா.

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஜனார்தனா யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் தத் அஸ்து மே ஓ கடவுளே ! ஓ ஜனார்தனரே! நான் முறையான பக்தி இல்லாமல், முறையான மந்திரங்கள் இல்லாமல், முறையான விதிமுறைகளை அனுஷ்டிக்காமல் செய்யும் சிறிய பூஜையையும் ஏற்று அதனை முழுமை அடையச் செய்வீராக யத் தத்தம் பக்தி மாத்ரேன பத்ரம் புஷ்பம் பலம் ஜலம் ஆவேதிதம் நிவேத்யான் து தத் க்ருஹானானு கம்பயா நான் பக்தியோடு எதை அர்பணித்தாலும் – இலையோ, பூவோ, நீரோ, பழமோ - தையை கூர்ந்து அதை தங்கள் காரணமற்ற கருணையால் ஏற்று கொள்ள வேண்டும். விதி ஹீனம் மந்த்ர ஹீனம் யத் கின்சிட் உபபாதிதம் க்ரியா மந்த்ர விஹீனம் வா தத் சர்வம் க்ஷந்தும் அர்ஹஸி முறையான மந்திரங்கள் இல்லாமலும் முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும் நான் உங்களை வணங்கி இருந்தால் தையை கூர்ந்து தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும். அஞ்ஞானாத் அதவா ஞானாத் அசுபம் யன் மயா க்ருதம் க்ஷ்ந்தும் அர்ஹஸி தத் சர்வம் தாஸ்ஏனைவ க்ரிஹான மம் ஸ்திதி சேவா கதிர் யாத்ரா ஸ்ம்ரிதிஷ் சிந்த ஸ்துதிர் வச பூயாத் சர்வாத்மனா விஷ்ணோ மைதீயம் த்வயி சேஸ்திதம் நான் எனது அறியாமையினாலோ அல்லது தெரியாமலோ ஏதேனும் அமங்கலமான செ...

பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்

  உபாக்யானே உபதேசம் (  அருளியவர் :-  ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்  ஒரு முறை, ஒரு ஆன்மீக குரு தன்னுடைய சந்நியாச சீடனுக்கு பகவத் கீதையை கொடுத்து, அதை தினமும் இடைவிடாமல் படிக்குமாறு அறிவுறுத்தினார். குருவின் கட்டளையை ஏற்ற சந்நியாச சீடன், விந்திய மழையின் ஒரு குகையில் அமர்ந்து, பகவத் கீதையை தினமும் படிக்க ஆரம்பித்தார்.  அந்த குகையில் இருந்த ஒரு சிறிய எலி, பகவத் கீதையை கொஞ்சம் கொஞ்சமாக கொறித்து தின்ன ஆரம்பித்தது. எலியுடைய இந்த சேட்டையை பார்த்த அந்த சீடர், அருகிலிருந்த கிராமத்திலிருந்து ஒரு பூனையை கொண்டு வந்தார்.  அடுத்த பிரச்சனை வந்தது.  பூனையை பராமரிக்க பால் தேவை என்பதை உணர்ந்தார். இந்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு பசுவை தேடினார். பகவானின் கருணையால் ஒரு அன்புள்ளம் கொண்டவர், இந்த சீடருக்கு பசுவை தானமாக வழங்கினார். மிகவும் மகிழ்ந்த சீடர், தனது இருப்பிடத்திற்கு வந்தார்.   அடுத்த பிரச்சனை வந்தது.  பசு குகைக்குள் இருக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதற்கு ஒரு தொழுவத்தை கட்ட முட...

தாமோதராஷ்டகம்

  பதம்  1 நமாமீஷ்வரம் ஸச்-சித்-ஆனந்த-ரூபம் லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம் யஷோதா-பியோலூகலாத் தாவமானம் பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய-கோப்யா மொழிபெயர்ப்பு   பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய ரூபத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகின்றேன். சுறா மீனின் வடிவிலுள்ள காதணிகள் இங்குமங்கும் ஆட, தெய்வீகத் திருத்தலமான கோகுலத்தில் அவர் அழகாக ஜொலித்துக் கொண்டுள்ளார். அன்னை யசோதையைக் கண்டதும் பயத்தால் மர உரலிலிருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அதைவிட வேகமாக அவரை விரட்டிய அன்னையினால் அவரைப் பிடித்து விட முடிந்தது. அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு நான் எனது பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன். பதம்  2 ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜன்தம் கராம்போஜ-யுக்மேன ஸாதங்க-நேத்ரம் முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம் மொழிபெயர்ப்பு   (அன்னையின் கரங்களில் இருந்த கோலைக் கண்டதும்) அவர் அழுதபடி தாமரை கரங்களைக் கொண்டு, பயம் நிறைந்த கண்களை மீண்டும்மீண்டும் கசக்குகிறார். சங்கின் மூன்று கோடுகளை ஒத்திருக்கும் அவரது கழுத்தில்...

விஜயதசமி நாளில் பகவான் ஶ்ரீ சைதன்யர் வெளிப்படுத்திய திவ்ய லீலைகள்

ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / மத்திய லீலை 15. 32 முதல் 36 🔆🔆🔆🔆🔆🔆🔆 விஜயா-தஷமீ லங்கா-விஜயேர தினே  வானர-ஸைன்ய கைலா ப்ரபு லஞா பக்த-க ணே இலங்கையினை வெற்றி கொண்ட விஜயதசமி நாளில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எல்லா பக்தர்களையும் வானர சேனைகளாக வேடமணியச் செய்தார். ஹனுமான்-ஆவேஷே ப்ரபு வ்ரி'க்ஷ-ஷாகா லஞா  லங்கா-கஃடேசஃடி பேலே கஃட பாரங்கியா ஹனுமானின் பரவசத்தை வெளிப்படுத்திய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஒரு பெரிய மரக்கிளையினைக் கையிலெடுத்து, இலங்கையின் கோட்டைச் சுவர்களில் ஏறி, அதனைத் தகர்க்கத் தொடங்கினார். 'காஹாரே ராவ்ணா' ப்ரபு கஹே க்ரோதா, வேஷே  ஜகன்-மாதா ஹரே பாபீ மாரிமு ஸவம்ஷே ஹனுமானின் பரவசத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கோபத்துடன் கூறினார், "எங்கே அந்த அயோக்கிய இராவணன்? அவன் அகிலத்தின் அன்னையான சீதையை அபகரித்துள்ளான். தற்போது நான் அவனையும் அவனது வம்சத்தினர் அனைவரையும் கொல்லப் போகிறேன்.'' கோ ஸாஞிர ஆவேஷ தேகி லோகே சமத்கார  ஸர்வ-லோக ஜய ஜய பலே பார பார ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பரவசத்தைக் கண்டு அனைவரும் பெரிதும் வியப்புற்றனர், "ஜய! ஜய!" என்று மீண்டும் மீண்டும் முழங்கத் தொடங்கினர். ஏஇ-ம...

ஶ்ரீ ராமசந்திர விஜய உற்சவம் (தசரா)

  யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம் எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன். பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் தர்ம-ஸம்ஸதாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தழைத்தோங்கும்போது, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக முழுமுதற் கடவுள் இவ்வுலகில் யுகந்தோறும் அவதரிக்கின்றார் என்பதை நாம் பகவத் கீதையில் (4.7 & 8 காண்கிறோம். முழுமுதற் கடவுள் மனித சக்திக்கு மட்டுமின்றி, தேவர்களின் சக்திக்கும் அப்பாற்பட்டவர் .இராமர் தேவர்களையே அச்சம்கொள்ளச் செய்த இராவணனைக் கொல்வதர்காக , சமுத்திரத்தின் மீது பாலம் கட்டி கடல் கடந்து இலங்கை சென்று இரவணண வதம் செய்தார். இவ்வாறாக,ஸ்ரீ இராமர், சாதுக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த இராவணன் உட்பட பல்வேறு அசுரர்களைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினார...