Skip to main content

Posts

பகவான்

“பக” என்ற சொல்லுக்கு “வளம்” என்று பொருள். “வான்” என்றால் “உடையவர்”. (பகவான்- வளங்கள், சிறப்புக்கள், செல்வங்கள் உடையவர்) படைப்பின் சிறப்புக்களும், பகவானிடம் பொருந்தியுள்ளன. வேதங்களில் கூறப்பட்டுள்ளது போல் (கடோபநிஷத் 2.2.13) “நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான்” ‘நித்ய’ (ஒருமை) பகவான், ‘நித்யானாம்’ (பன்மை) ஜீவாத்மாக்கள் அதாவது உயிர்வாழிகள், ‘நித்ய நித்யானாம்’ - நாம் பலர், கடவுள் ஒருவரே. ஜீவன்கள் எண்ணிலடங்காதவை. “அனந்த” என்றால் “எல்லையற்றவை” இந்த ஜீவன்கள் (உயிர்வாழிகள்) எல்லாம் பரமபுருஷனான பகவானால் பராமரிக்கப்படுகின்றன. சிறிய எறும்பு முதல் பெரிய யானை போன்ற 84,00,000 உயிரின வகைகள் பகவானால் பராமரிக்கப்படுகின்றன. நம்மை அவர் காப்பாற்றமாட்டாரா என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பகவானின் பக்தர்களாயிருந்து அவரது பாதகமலங்களில் சரணடைந்து அவருக்குத் தொண்டாற்றுவதற்காக மற்றெல்லாவற்றையும் துறந்திருப்பவர்கள் நிச்சயமாகக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள். எமது கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் 350க்கும் மேலான மையங்கள் உள்ளன; கிருஷ்ணர் அவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார். எமது பக்தித் தொண...

எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை

  ஜட வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற கறைபடிந்த நோக்கமே மனித சமூகத்தின் துன்பங்களுக்குக் காரணம். புலன் நுகர்வுக்காக ஜட வசதிகளைச் சுரண்டுவதில் மனித சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பகவானின் மாயையான, ஜடச் சக்தியில் அது சிக்கிக் கொள்கிறது. இவ்வாறாக உலகின் துன்பம் குறைக்கப் படுவதற்கு பதிலாக தீவிரமாக்கப்படுகிறது. உணவு தானியங்கள், பால், பழம், மரம், கல், சர்க்கரை, பட்டு நூல், இரத்தினங்கள், பருத்தி, உப்பு, நீர் மற்றும் காய்கறிகள் போன்றவைகளின் உருவில் மனிதனின் அன்றாடத் தேவைகள் பூரணமாக பகவானால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரபஞ்சத்திலுள்ள மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், அதிலுள்ள ஒவ்வொரு கிரகத்திலும் வாழும் உயிரினங்களுக்கும், உணவு வழங்குவதற்கும், அவற்றின் நலத்தைப் பேணுவதற்கும் போதுமான அளவுக்கு பகவான் அளித்துள்ளார். தேவைகளைப் பூர்த்தி செய்பவர் பூரணமானவராவார். மேலும் மனிதன் இத்தேவைகளை பெறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டுமே சிறிது தேவைப்படுகிறது. செயற்கையான முறையில் வாழ்வின் வசதிகளை உண்டாக்கும் இயந்திரங்கள், கருவிகள் அல்லது மிகப்பெரிய இயந்திர சாதனங்கள் ஆகியவை தேவையில்லை...

ஆன்மீக முன்னேற்றப் பாதையிலுள்ள இடைஞ்சல்கள்

ஜன்மைஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீபிர் ஏதமான-மத: புமான் நைவார்ஹதி அபிதாதும் வை த்வாம் அகிஞ்சன-கோசரம் மொழிபெயர்ப்பு எம்பெருமானே, பகவானாகிய தங்களை சுலபமாக அணுகிவிட முடியும். ஆனால் பௌதிக வாழ்வில் முற்றிலும் விரக்தி அடைந்தவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கௌரவமான குடும்பம், பெரும் செல்வம், உயர்ந்த கல்வி மற்றும் உடலழகு ஆகியவற்றில் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயலும், ஒருவரால் உண்மையான உணர்வுடன் உங்களை அணுக முடியாது. பொருளுரை கௌரவமான குடும்பத்தில் பிறந்து அதிகமான செல்வத்தைப் பெற்றிருத்தல், கல்வி மற்றும் கவர்ச்சியான உடழலகு ஆகியவற்றைப் பெற்றிருத்தல் பௌதிக முன்னேற்றமாக கருதப்படுகின்றன. பௌதிகவாதிகள் அனைவரும் இத்தகைய பௌதிக செல்வங்களைப் பெறுவதில் தீவிரமாக உள்ளனர். இதுவே பௌதிக நாகரிக முன்னேற்றம் எனப்படுகிறது. ஆனால் இச்செல்வங்களை எல்லாம் பெற்றிருப்பதால், நிலையற்ற அவ்வுடைமைகளில் மயங்கி திமிர் பிடித்தவர்களாக நடந்துகொள்கின்றனர். இதன் விளைவாக, இத்தகைய திமிர் பிடித்தவர்களால் பகவானின் புனித நாமத்தை, “ஓ கோவிந்தா, ஓ கிருஷ்ணா” என்று மனப்பூர்வமாக உச்சரிக்க இயலாது. ஒருமுறை பகவானின் புனித நாமத்தை உச்சரிப்பதால், பாவியொருவ...

பண்பாட்டைக் கைவிடும் பாரத மக்கள்

  மேற்கத்திய நாட்டினரையும் அந்நிய நாட்டினரையும் பின்பற்றுவதால் நாம் நமது சொந்த பண்பாட்டைக் கைவிட்டு விட்டோம். இந்தியர்களின் சுபாவம் மேற்கத்திய நாட்டினரிடமிருந்து வேறுபட்டிருப்பதால், மேற்கத்திய பண்பாட்டையும் இந்தியர்களால் சரியாக பின்பற்ற முடிவதில்லை. முந்தைய பிறவிகளில் ஆன்மீகப் பண்பாட்டை விருத்தி செய்ய விரும்பியவர்களே இந்தியாவில் பிறக்கின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்தியாவில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், ஒருவன் பிறந்ததும், இந்நாட்டின் முட்டாள் தலைவர்களும், முட்டாள் தந்தையும், முட்டாள் ஆசிரியர்களும், “ஆன்மீகப் பண்பாடு பயனற்றது, ஆன்மீகத்தில் ஆர்வம் இருந்ததால்தான் நம்மை ஆங்கிலேயர்கள் அடிமைகளாக்கினர். எனவே, அவற்றையெல்லாம் துறந்துவிட்டு தொழிற்கல்வியில் முன்னேறுங்கள்,” என்று கூறி அவனைக் கெடுத்து விடுகின்றனர். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பாவப்பட்ட இளைய தலைமுறையினர் என்ன செய்ய முடியும்? —தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், ஏப்ரல் 15, 1976ல் மும்பையில் அருளிய ஸ்ரீமத் பாகவத (7.12.4) உபன்யாஸத்தின் ஒரு பகுதி. 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆...

பிரம்மாவின் பிறப்பு மற்றும் ஶ்ரீமன் நாராயணனின் வல்லமை

  பிரம்மாவின் பிறப்பு மற்றும் ஶ்ரீமன் நாராயணனின் வல்லமை படைப்பிற்குப் பிறகு பிறந்த முதல் ஜீவராசியான பிரம்மா, நாராயணரின் நேரிடையான மகனாவார். நாராயணர், கர்போதகசாயி விஷ்ணுவாக ஜடப் பிரபஞ்சத்தினுள் முதன்முதலாகப் பிரவேசித்தார். ஆன்மீக தொடர்பின்றி ஜடத்தினால் படைக்க முடியாது. படைப்பின் முதல் துவக்கத்திலிருந்தே இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பரமாத்மா பிரபஞ்சத்திற்குள் புகுந்தார். விஷ்ணுவின் நாபியிலிருந்து உதயமாகி மலர்ந்த தாமரைப் பூவின் மீது முதல் ஜீவராசியான பிரம்மா பிறந்தார். இதனால் விஷ்ணு பத்மனாபன் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மா, தாய் லக்ஷ்மி தேவியின் தொடர்பில்லாமல், தந்யைிடமிருந்து நேரடியாகப் பிறந்தவராவார். இதனால் அவர் “ஆத்ம பூ” எனப்படுகிறார். லக்ஷ்மிதேவி நாராயணருக்குப் பணிவிடை செய்துகொண்டு அவரருகிலேயே இருந்தாள். இருப்பினும் லக்ஷ்மி தேவியின் தொடர்பு இல்லாமலேயே நாராயணர் பிரம்மாவைப் பெற்றார். அது பகவானின் சர்வசக்தியாகும். நாராயணர் மற்ற ஜீவராசிகளைப் போன்றவர் என்று முட்டாள்தனமாகக் கருதுபவன் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாராயணர் சாதாரண ஒரு ஜீவராசியல்ல. அவர் சாக்ஷாத் பரம புருஷ பகவானா...

பரம புருஷ பகவானான கிருஷ்ணரை வழிபட்டால் ஒருவனது எல்லாக் குறிக்கோளும் அடையப்படுகிறது

 

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரால் அறிவிக்கப்பட்ட தத்துவம்