ராஜஸுய யாகத்தில் புனிதப்படுத்தப்பட்டிருந்த அழகிய கேசம் திரௌபதிக்கு இருந்தது . பாண்டவர்கள் அவளைப் பந்தயத்தில் தோற்றுப் போனதும் , துச்சாதனன் அவளை அவமானப்படுத்த எண்ணி அவளது புகழுக்குரிய கூந்தலைத் தொட்டான் . இந்நிலையில் திரௌபதி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்தாள் . அப்போது , குருட்சேத்திர யுத்தத்தின் பயனாக , துச்சாதனன் மற்றும் அவனது குழுவினரின் எல்லா மனைவிகளும் தங்களது கூந்தல்கள் அவிழ்க்கப்பட்டவர்கள் ஆகவேண்டும் என்று கிருஷ்ணர் முடிவு செய்தார் . இவ்வாறாக குருட்சேத்திரப் போர்க்களத்தில் திருதராஷ்டிரரின் எல்லா மக்களும் , பேரன்களும் இறந்தபின் , அவர்களது மனைவிகள் அனைவரும் விதவைகளானதால் , தங்களது கேசங்களை அவர்கள் அவிழ்த்துவிட வேண்டியதாயிற்று . அதாவது , பகவானின் சிறந்த பக்தையான திரௌபதியை துச்சாதனன் அவமானப்படுத்தியதால் , குரு வம்சத்தின் எல்லா மனைவிகளும் விதவைகளாயினர் . தனக்கு நேரும் அவமரியாதைகளை பொறுத்துக்கொள்ளும் பகவான் , தமது பக்தர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார் . மிகச்சிறந்த ...