Skip to main content

Posts

பகவான், தமது பக்தர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார்.

  ராஜஸுய யாகத்தில் புனிதப்படுத்தப்பட்டிருந்த அழகிய கேசம் திரௌபதிக்கு இருந்தது . பாண்டவர்கள் அவளைப் பந்தயத்தில் தோற்றுப் போனதும் , துச்சாதனன் அவளை அவமானப்படுத்த எண்ணி அவளது புகழுக்குரிய கூந்தலைத் தொட்டான் . இந்நிலையில் திரௌபதி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்தாள் . அப்போது , குருட்சேத்திர யுத்தத்தின் பயனாக , துச்சாதனன் மற்றும் அவனது குழுவினரின் எல்லா மனைவிகளும் தங்களது கூந்தல்கள் அவிழ்க்கப்பட்டவர்கள் ஆகவேண்டும் என்று கிருஷ்ணர் முடிவு செய்தார் . இவ்வாறாக குருட்சேத்திரப் போர்க்களத்தில் திருதராஷ்டிரரின் எல்லா மக்களும் , பேரன்களும் இறந்தபின் , அவர்களது மனைவிகள் அனைவரும் விதவைகளானதால் , தங்களது கேசங்களை அவர்கள் அவிழ்த்துவிட வேண்டியதாயிற்று . அதாவது , பகவானின் சிறந்த பக்தையான திரௌபதியை துச்சாதனன் அவமானப்படுத்தியதால் , குரு வம்சத்தின் எல்லா மனைவிகளும் விதவைகளாயினர் . தனக்கு நேரும் அவமரியாதைகளை பொறுத்துக்கொள்ளும் பகவான் , தமது பக்தர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார் . மிகச்சிறந்த ...

ஜராசந்தன்

  ஜராசந்தன் மிகவும் சக்தி வாய்ந்த மகத ராஜனாவான் . அவனது பிறப்பும் , செயல்களும் கவனத்தைக் கவரக்கூடியயவையாகும் . அவனது தந்தையான பிருஹத்ரத ராஜனும் பெரும் செழிப்பும் , சக்தியும் கொண்ட மகத ராஜனாக இருந்தவராவார் . ஆனால் காசிராஜனின் இரு புதல்விகளை மணந்தபோதிலும் அவருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை . இதனால் ஏமாற்றமடைந்த அவர் மனைவிகளுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்தார் . அங்கு ஒரு மகனைப் பெறும் வரத்தை அரசனுக்களித்த மஹாரிஷி ஒருவர் , ராணிகள் உண்பதற்கு ஒரு மாங்கனியையும் கொடுத்தார் . அதை உண்ட ராணிகள் விரைவில் கர்ப்பவதிகளாயினர் . அரசர் மனம் மகிழ்ந்தார் . ஆனால் கனிந்ததும் , ராணிகள் ஒரு குழந்தையை இரு பாகங்களாக பெற்றெடுத்தனர் . அவ்விரு பாகங்களும் காட்டில் வீசப்பட்டன . அங்கு வாழ்ந்து வந்த ஓரரக்கி புதுக் குழந்தையின் விந்தையான தசையையும் இரத்தத்தையும் கண்டு மகிழ்ந்து , அதைப் பற்றி அறிய ஆவல்கொண்டு , இரு பாகங்களையும் ஒன்றாக இணைத்தாள் . குழந்தையும் முழுமையடைந்து உயிர் பெற்றது . ஜரா எனும் பெயர் கொண்ட அந்த அரக்கி , குழந்தைய...